சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்த வேண்டும்!
சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீர்ப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளதோடு ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தும் அவ்வாறான தன்மையில் அமைந்துள்ளதன் அடிப்படையில் அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க முடியும் என்று தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது வாராந்த கேள்வி பதில் அறிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவரது கேள்வி பதில் அறிக்கை வருமாறு, இவ்வாரக் கேள்வி கொழும்பில் இருந்து வந்துள்ளது. கேள்வி பின்வருமாறு.
பத்திரிகையாளர் கேள்வி :- அடுத்த வாரம் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. அது பற்றிய உங்கள் கருத்தென்ன?
பதில் :- 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 30/01 என்ற பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்டது. அதன் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு பல கடப்பாடுகள் இருந்தன. அவற்றை நிறைவேற்ற இரண்டு ஆண்டு காலம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவற்றை நிறைவேற்றாமலேயே இலங்கை அரசாங்கம் இருந்து வந்தது.
கடந்த மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியது. பொறுப்புக்கூறலை உள்ளடக்கிய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் அதன்போது வழங்கப்பட்டது. இலங்கையின் அனுசரணையைப் பெறுவதற்காக மேற்கு நாடுகள் அந்தப் பிரேரணையின் காரத்தை பெருமளவுக்குக் குறைத்தன என்பது உங்களுக்குத் தெரியும். சர்வதேச சமூகம் தற்போதைய இலங்கை ஆட்சியாளருக்குச் சாதகமான முறையிலேயே அப்போது இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அப்படியும் அரசாங்கம் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை.
இப்போது ஒரு வருடம் கடந்துவிட்டது. அடுத்தவாரம் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் ஆரம்பமாகின்றது. ஆனால் இந்த ஒரு வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் எவை நிறைவேற்றப்பட்டன?
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு இப்போது ஒன்றரை வருடங்கள் சென்றுவிட்டது. இன்னும் அது செயற்படத் தொடங்கவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் கைவாங்கப்படவில்லை. அந்தக் கொடூரமான சட்டத்தின் கீழ் கைதான பலர் இன்னமும் தடுப்பில் உள்ளனர். பலர் சம்பந்தமாக வழக்குகள் பதியப்படவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இனநெருக்கடிக்கான அரசியலமைப்பு மூலமான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையும் தற்போது இல்லை என்றே கூறலாம். நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளையடுத்து கூட்டரசாங்கம் அதனை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்பதே யதார்த்தம்.
இந்த நிலையில் சர்வதேசம் என்ன செய்யப்போகின்றது? சர்வதேசத்தின் அழுத்தங்களால் மட்டுந்தான் இங்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழர்களுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது. அமெரிக்காவில் இருந்து வந்த நிஷா பிஸ்வால் அவர்களிடம் ஐ.நா மீண்டும் இருவருடங்கள் தவணை கொடுப்பதைப் பற்றி எனது ஆட்சேபணைகளை சென்ற வருட ஆரம்பத்தில் தெரிவித்த போது தமிழர்களை ஒரு போதும் அமெரிக்கா கைவிடாது என்றார். இப்பொழுது அவரும் பதவி இழந்துவிட்டார்.
எமது பெரும்பான்மையின அரசாங்கம் நெருக்குதல் இல்லாவிட்டால் ஒரு போதும் எமது உரிமைகளைத் தரமுன்வராது என்பதே எனது கருத்து. நியாயமான முறையில் போர்க் குற்றங்களை விசாரிக்க அரசாங்கம் முன்வராது. எந்தளவுக்கு நெருக்குதல்களை பிற அரசாங்கங்கள் உண்டு பண்ணுவன என்பது நாம் அவர்களுடன் சேர்ந்து பேசி ஏற்படுத்த வேண்டியதொன்று. காலங் கடந்தால் “ஆறின கஞ்சி பழங்கஞ்சி” ஆகிவிடும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீரப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தின் அடிப்படையிலேயே அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க முடியும் என்று கருதுகின்றேன்.
இவ்வாறான ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளதோடு ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தும் அவ்வாறான தன்மையில் அமைந்துள்ளதன் அடிப்படையில் அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க முடியும் என்று தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது வாராந்த கேள்வி பதில் அறிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவரது கேள்வி பதில் அறிக்கை வருமாறு, இவ்வாரக் கேள்வி கொழும்பில் இருந்து வந்துள்ளது. கேள்வி பின்வருமாறு.
பத்திரிகையாளர் கேள்வி :- அடுத்த வாரம் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. அது பற்றிய உங்கள் கருத்தென்ன?
பதில் :- 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 30/01 என்ற பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்டது. அதன் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு பல கடப்பாடுகள் இருந்தன. அவற்றை நிறைவேற்ற இரண்டு ஆண்டு காலம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவற்றை நிறைவேற்றாமலேயே இலங்கை அரசாங்கம் இருந்து வந்தது.
கடந்த மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியது. பொறுப்புக்கூறலை உள்ளடக்கிய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் அதன்போது வழங்கப்பட்டது. இலங்கையின் அனுசரணையைப் பெறுவதற்காக மேற்கு நாடுகள் அந்தப் பிரேரணையின் காரத்தை பெருமளவுக்குக் குறைத்தன என்பது உங்களுக்குத் தெரியும். சர்வதேச சமூகம் தற்போதைய இலங்கை ஆட்சியாளருக்குச் சாதகமான முறையிலேயே அப்போது இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அப்படியும் அரசாங்கம் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை.
இப்போது ஒரு வருடம் கடந்துவிட்டது. அடுத்தவாரம் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் ஆரம்பமாகின்றது. ஆனால் இந்த ஒரு வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் எவை நிறைவேற்றப்பட்டன?
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு இப்போது ஒன்றரை வருடங்கள் சென்றுவிட்டது. இன்னும் அது செயற்படத் தொடங்கவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் கைவாங்கப்படவில்லை. அந்தக் கொடூரமான சட்டத்தின் கீழ் கைதான பலர் இன்னமும் தடுப்பில் உள்ளனர். பலர் சம்பந்தமாக வழக்குகள் பதியப்படவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இனநெருக்கடிக்கான அரசியலமைப்பு மூலமான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையும் தற்போது இல்லை என்றே கூறலாம். நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளையடுத்து கூட்டரசாங்கம் அதனை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்பதே யதார்த்தம்.
இந்த நிலையில் சர்வதேசம் என்ன செய்யப்போகின்றது? சர்வதேசத்தின் அழுத்தங்களால் மட்டுந்தான் இங்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழர்களுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது. அமெரிக்காவில் இருந்து வந்த நிஷா பிஸ்வால் அவர்களிடம் ஐ.நா மீண்டும் இருவருடங்கள் தவணை கொடுப்பதைப் பற்றி எனது ஆட்சேபணைகளை சென்ற வருட ஆரம்பத்தில் தெரிவித்த போது தமிழர்களை ஒரு போதும் அமெரிக்கா கைவிடாது என்றார். இப்பொழுது அவரும் பதவி இழந்துவிட்டார்.
எமது பெரும்பான்மையின அரசாங்கம் நெருக்குதல் இல்லாவிட்டால் ஒரு போதும் எமது உரிமைகளைத் தரமுன்வராது என்பதே எனது கருத்து. நியாயமான முறையில் போர்க் குற்றங்களை விசாரிக்க அரசாங்கம் முன்வராது. எந்தளவுக்கு நெருக்குதல்களை பிற அரசாங்கங்கள் உண்டு பண்ணுவன என்பது நாம் அவர்களுடன் சேர்ந்து பேசி ஏற்படுத்த வேண்டியதொன்று. காலங் கடந்தால் “ஆறின கஞ்சி பழங்கஞ்சி” ஆகிவிடும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீரப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தின் அடிப்படையிலேயே அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க முடியும் என்று கருதுகின்றேன்.
முன்னாள் ஜனாதிபதியை விட அதிக சொத்துக்களை வைத்திருக்கும் கருணா..
நமது நாட்டு (இலங்கை) அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது.
இந்த வரிசையில் இருக்கும் தமிழர்கள் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவும் தான் தமிழ் அரசியல்வாதிகள். இவர்களது சொத்து மதிப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை விட அதிகமாக இருப்பது ஆச்சரியமான அதிர்ச்சியளிக்கும் தகவல்.
அந்த சஞ்சிகையின் படி முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தான் முதலிடம், அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 1800 கோடி டொலர். இலங்கை ரூபாவின் படி சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபா.
முதல் 10 கோடீஸ்வர அரசியல்வாதிகள்.
முதலாமிடம் - மஹிந்த ராஜபக்க்ஷ (18 பில்லியன் டொலர்)
இரண்டாமிடம் - அமைச்சர் அர்ஜின ரணதூங்க (6 கோடி 80 லட்சம் டொலர்)
மூன்றாமிடம் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (1கோடி 40 லட்சம் டொலர்)
நான்காமிடம் - ஆறுமுகம் தொண்டமான் (19 லட்சம் டொலர்)
ஐந்தாமிடம் - கருணா (17 லட்சம் டொலர்)
ஆறாமிடம் - ஏ.எச்.எம். பௌசி (14 லட்சம் டொலர்)
ஏழாமிடம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (14 லட்சம் டொலர்)
எட்டாம் இடம் - ஜே.வி.பியின் எம்.பியான அனுரகுமார திஸாநாயக்க (13 லட்சம் டொலர்)
ஒன்பதாம் இடம் - ஏ.எல்.எம். அதாவுதுல்லா (9 லட்சம் டொலர்)
பத்தாம் இடம் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 8 லட்சத்து 60 ஆயிரம் டொலர்) இந்த பெறுமதியை இலங்கை ரூபாவில் அறிய விரும்புவோர் 154 ஆல் பெருக்கிப்பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த வரிசையில் இருக்கும் தமிழர்கள் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவும் தான் தமிழ் அரசியல்வாதிகள். இவர்களது சொத்து மதிப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை விட அதிகமாக இருப்பது ஆச்சரியமான அதிர்ச்சியளிக்கும் தகவல்.
அந்த சஞ்சிகையின் படி முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தான் முதலிடம், அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 1800 கோடி டொலர். இலங்கை ரூபாவின் படி சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபா.
முதல் 10 கோடீஸ்வர அரசியல்வாதிகள்.
முதலாமிடம் - மஹிந்த ராஜபக்க்ஷ (18 பில்லியன் டொலர்)
இரண்டாமிடம் - அமைச்சர் அர்ஜின ரணதூங்க (6 கோடி 80 லட்சம் டொலர்)
மூன்றாமிடம் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (1கோடி 40 லட்சம் டொலர்)
நான்காமிடம் - ஆறுமுகம் தொண்டமான் (19 லட்சம் டொலர்)
ஐந்தாமிடம் - கருணா (17 லட்சம் டொலர்)
ஆறாமிடம் - ஏ.எச்.எம். பௌசி (14 லட்சம் டொலர்)
ஏழாமிடம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (14 லட்சம் டொலர்)
எட்டாம் இடம் - ஜே.வி.பியின் எம்.பியான அனுரகுமார திஸாநாயக்க (13 லட்சம் டொலர்)
ஒன்பதாம் இடம் - ஏ.எல்.எம். அதாவுதுல்லா (9 லட்சம் டொலர்)
பத்தாம் இடம் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 8 லட்சத்து 60 ஆயிரம் டொலர்) இந்த பெறுமதியை இலங்கை ரூபாவில் அறிய விரும்புவோர் 154 ஆல் பெருக்கிப்பார்த்துக் கொள்ளுங்கள்.
சாவே இல்லாத மனிதர் 2050 ல் இருப்பார்கள்
2050ம் ஆண்டில் சாவு அற்ற மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ்வார்கள். இது அதிசயமாக இருக்கும் ஆனால் உண்மை. மனித வாழ்வு என்பது, இறுதியில் பார்த்தால் மூளையில் உள்ள நினைவுகள் தான். உடல் ஊனமாகிப் போகும். ஆனால் உண்மையில் மனித வாழ்வு என்பது, ஒருவரின் ஞாபகங்களே ஆகும். மூளை எப்போது இறக்கிறதோ. அன்றே மனிதனும் இறந்துவிடுகிறான் என்று பொருள். ஆனால் பலர் இதனை ஏற்க்க மாட்டார்கள்.
தற்போது விஞ்ஞானிகள் மனித மூளையில் உள்ள நினைவு செல்களை அப்படியே காப்பி செய்து. அதனை வைத்திருக்க கண்டு பிடித்துள்ளார்கள். ஆனால் அதில் பயன் எதுவும் இல்லை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு சாதனம், மூளையை போல இயங்க வல்லது. எனவே எமது ஞாபங்களை காப்பி செய்து அந்த சாதனத்தினுள் செலுத்தினால் போதும். அந்த மூளை உயிர்பெற்று விடும். இதனூடாக ஒருவர் வாழ முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். தற்போது இந்த இயந்திரத்தோடு உதடுகளை, கைகளை மற்றும் கால்களை பொருத்தவும்.
செயற்க்கை நியூரான்கள் கொண்டு அசைவுகளை ஏற்பாடுத்தவும் முனைகிறார்கள். இன்னும் 30 வருடங்களில் இது சாத்தியமாகிவிடும். இனி நாம் காரை வாங்கி வைத்திருப்பது போல இந்த சாதனத்தை வாங்கி, எமது நினைவுகளை மாற்றினால் போதும். எமது உடல் இறந்த பின்னனும் எமது மூளை உயிர்வாழும். இதனால் மனிதன் சாவைக் கடந்தும் வாழப் போகிறான்… இதுவே வருங்கால உண்மை ஆகும்…
தற்போது விஞ்ஞானிகள் மனித மூளையில் உள்ள நினைவு செல்களை அப்படியே காப்பி செய்து. அதனை வைத்திருக்க கண்டு பிடித்துள்ளார்கள். ஆனால் அதில் பயன் எதுவும் இல்லை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு சாதனம், மூளையை போல இயங்க வல்லது. எனவே எமது ஞாபங்களை காப்பி செய்து அந்த சாதனத்தினுள் செலுத்தினால் போதும். அந்த மூளை உயிர்பெற்று விடும். இதனூடாக ஒருவர் வாழ முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். தற்போது இந்த இயந்திரத்தோடு உதடுகளை, கைகளை மற்றும் கால்களை பொருத்தவும்.
செயற்க்கை நியூரான்கள் கொண்டு அசைவுகளை ஏற்பாடுத்தவும் முனைகிறார்கள். இன்னும் 30 வருடங்களில் இது சாத்தியமாகிவிடும். இனி நாம் காரை வாங்கி வைத்திருப்பது போல இந்த சாதனத்தை வாங்கி, எமது நினைவுகளை மாற்றினால் போதும். எமது உடல் இறந்த பின்னனும் எமது மூளை உயிர்வாழும். இதனால் மனிதன் சாவைக் கடந்தும் வாழப் போகிறான்… இதுவே வருங்கால உண்மை ஆகும்…
தமிழில் பேசுவது அவமானம் இல்லை
சிங்கப்பூரில் உள்ள சீனக் கடை ஒன்றில், “தமிழில் பேசுவது அவமானம் இல்லை” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. கடையில் அவர்கள் தமிழில் பேசுகிறார்கள் என்பது மிக மிக ஆச்சரியமான விடையம். தமிழுக்கு அவ்வளவு மரியாதை தற்போது உலகில் கிடைத்து வருகிறது. சமீபத்தில் தான் கூகுள் அட் சென்ஸ் , தமிழையும் தனது அதிகார பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டது.
இதனூடாக இனி தமிழ் இணையங்கள் கூகுள் அட் சென்ஸ் விளம்பரங்களை போட்டு பணம் சம்பாதிக்கலாம். எனவே தமிழ் இணையங்கள் இனி பல்கிப் பெருகி உலகளாவிய ரீதியில் பெரும் இடத்தை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
இதனூடாக இனி தமிழ் இணையங்கள் கூகுள் அட் சென்ஸ் விளம்பரங்களை போட்டு பணம் சம்பாதிக்கலாம். எனவே தமிழ் இணையங்கள் இனி பல்கிப் பெருகி உலகளாவிய ரீதியில் பெரும் இடத்தை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
சீமான் , ஈழத்தமிழர்களுக்கு தலைவனாக முடியாது - Lathan Suntharalingam
சீமான் , ஈழத்தமிழர்களுக்கு தலைவனாக முடியாது - Lathan Suntharalingam
காதல் நோயின் அறிகுறிகள் என்ன?
காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
வியாதியை ஒத்ததுதான் காதல் ( காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய், ஞாபகம் வருகிறதா? ). எனவே, ஒரு நோய் ஏற்பட்டால் என்ன விதமான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அதே போல, தெளிவாகத் தெரியும் உடல் ரீதியான அறிகுறிகள் காதல் நோயாலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த அறிகுறிகள் என்ன ?
வியர்க்கும் கைகள், பசியின்மை ( "பாலுங்கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடி" ), முகம் உணர்ச்சிப்பெருக்கில் உப்புவது, இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை இவை .
காதலுக்கு பல கட்டங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டமும் ஒருவிதமான ரசாயனப் பொருட்களால் தூண்டப்படும் உடல் ரீதியான மாற்றங்களால் ஆட்டுவிக்கப்படுகின்றது.
முதலில் காமம் தோன்றும் ஒரு கட்டம் - இது அடிப்படையான பாலியல் ரீதியான ஒரு வேகம்.
இது ஈர்ப்பு நிலைக்கு இட்டுச் சென்று பின்னர் உணர்வு ரீதியாக ஒன்று சேரும் நிலைக்கும் பின்னர் அதுவே நீண்ட கால உறவுக்கும் வழி வகுக்கிறது.
ஆனால், இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் வரவேண்டியதில்லை என்கிறார் ஆராய்ச்சியாளர் ஹெலன் ஃபிஷர். இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.
"உங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சகாவுடனோ அல்லது கல்லூரியிலோ அல்லது உங்கள் சமூக வட்டத்தில் இருப்பவர் ஒருவருடனோ உங்களுக்கு ஏற்படும் ஒரு வித ஆழமான பற்றை , நேசத்தை நீங்கள் உணரலாம். இது மாதங்கள் அல்லது சில ஆண்டுகளுக்குப் பின்னர், மேலும் கனிந்து மாற்றம் பெற்றும் திடீரென நீங்கள் அவர் மீது காதல் வயப்படுவீர்கள்" என்று ஃபிஷர் பிபிசியிடம் கூறினார்.எனவே பற்று முதலில் வருகிறது. அதன் பின்னர் மிகவும் ஆழமான காதல் , பின்னர் பாலியல் வேகத்துடன் தொடர்புள்ள உணர்வுகள் .... அல்லது நீங்கள் ஒருவரால் பாலியல் ரீதியாகக் கவரப்படலாம், அவர் மீது அதற்கு பின்னர் காதல் ஏற்படலாம், அதன் பின்னர் அவர் மீது ஆழமான பற்று அல்லது உணர்வுகள் ஏற்படலாம்.... அல்லது முதலில் ஒருவருடன் பாலியல் உறவு கொள்வதற்கு முன்னரேயே அவர் மீது நீங்கள் கண்மூடித்தனமாகக் காதல் கொள்ளலாம்" என்கிறார் அவர்.
இந்த ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொருவிதமான ரசாயனப் பொருட்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
காதல் படிகள் !
காமம்:
காமம் என்பது செக்ஸ் ஹார்மோன்களான டெஸ்டொஸ்டீரோன் (testosterone) மற்றும் ஈஸ்ட்ரோஜென் (oestrogen) போன்றவற்றால் உந்தப்படுகிறது. டெஸ்டொஸ்டீரோன் என்ற ஹார்மோன் ஆண்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது பெண்களின் பாலியல் உணர்வுகளிலும் பெரும் பங்கு வகிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஈர்ப்பு:
இந்தக் கட்டம் காதலில் வீழ்ந்து மற்ற எல்ல விஷயங்களையும் காதலர்களால் சிந்திக்கக்கூட முடியாத நிலை. அவர்கள் உண்மையில் பசியை இழப்பார்கள். தூக்கம் தேவைப்படாது. தங்கள் காதலரைப் பற்றியே பகல் கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.
இந்த ஈர்ப்பு கட்டத்தில் "மோனோமைன்கள்" (monoamines) என்றறியப்படும் நரம்புகள் மூலம் செய்திகளைச் சொல்லும் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன.டோபோமைன் (Dopamine) இது ஒரு வகை ரசாயனம். இது கோக்கெயின் மற்றும் நிக்கோட்டினோரெபின்ப்ரின் என்றவைகளால் தூண்டப்படுகிறது. இதற்கு அட்ரினலின் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதுதான் காதலர்கள் உடலில் வியர்வையை உருவாக்குவது, இதயத்தை படபடக்கச் செய்வது போன்ற வேலைகளைச் செய்யும் பொருள்.
செரொட்டோனின் என்ற மற்றொரு ரசாயனம் காதல் விவகாரத்தை ஏற்படுத்தும் ரசாயனங்களில் மிகவும் முக்கியமானது. இதுதான் காதல் வயப்பட்டவர்களை தற்காலிகமாக பைத்திய நிலைக்குத் தள்ளும் வில்லன் !
பற்று, பாசம்:
இந்த கட்டம் ஈர்ப்புக் கட்டத்துக்கு அடுத்து ஏற்படுவது. அந்த உறவு நீடிக்கவேண்டுமென்றால் இந்த பற்று மிகவும் அவசியம். ஈர்ப்பு நிலை தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளைத் தவிர வேறொன்றும் உற்பத்தி ஆகாது!இந்த "பற்று" கட்டத்தில், இரண்டு ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. நரம்பு மண்டலத்தில் சுரக்கும் இந்த இரு ஹார்மோன்கள் சமூகப் பற்றை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
இது தவிர வேறு இரண்டு ரசாயனன்கள் உடலில் விளையாடுகின்றன.
வேசோப்ரெஸ்ஸின் (Vasopressin):
நீண்ட கால உறவு என்ற கட்டத்தில் ஒரு முக்கிய ரசாயனம் இது. இந்த ரசாயனம் ஆண்களால் அடக்கப்படும்போது, காதலர்களுக்கிடையே நிலவும் பந்தம் உடனடியாகக் குறைகிறது.
விசுவாசம் இழப்பது, துணைவரை( அல்லது துணைவியை) புதிய காதலர்களிடமிருந்து பாதுகாக்கத் தவறுவது போன்றவை இதனால் ஏற்படுகின்றன.ஆக்ஸிடோசின் (Oxytocin) என்ற இந்த ரசாயனம் ஹைபொதலாமஸ் என்ற சுரப்பியால் வெளியிடப்படுகிறது. இது குழந்தைப் பேறு காலத்தின் போது சுரக்கிறது. இதுதான் தாய்ப்பால் உருவாக உதவுகிறது. இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பந்தம், பிணைப்பு ஏற்பட உதவுகிறது.
இது காதலர்கள் அல்லது தம்பதியர் இருவர் உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் "பாலியல் உச்சகட்ட" நிலையிலும் வெளியாகிறது. இதுதான் வயது வந்தவர்களுக்கு இடையே பிணைப்பு ஏற்பட உதவுவதாகக் கருதப்படுகிறது.
அதிகம் உடலுறவு கொள்ளக் கொள்ள, தம்பதியருக்கிடையே பிணைப்பு ஆழமாகிறது என்கிறது இந்தக் கருத்தாக்கம் !
"ஆதலினார் காதல் செய்வீர் உலகத்தீரே", எனலாமா ?
வியாதியை ஒத்ததுதான் காதல் ( காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய், ஞாபகம் வருகிறதா? ). எனவே, ஒரு நோய் ஏற்பட்டால் என்ன விதமான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அதே போல, தெளிவாகத் தெரியும் உடல் ரீதியான அறிகுறிகள் காதல் நோயாலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த அறிகுறிகள் என்ன ?
வியர்க்கும் கைகள், பசியின்மை ( "பாலுங்கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடி" ), முகம் உணர்ச்சிப்பெருக்கில் உப்புவது, இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை இவை .
காதலுக்கு பல கட்டங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டமும் ஒருவிதமான ரசாயனப் பொருட்களால் தூண்டப்படும் உடல் ரீதியான மாற்றங்களால் ஆட்டுவிக்கப்படுகின்றது.
முதலில் காமம் தோன்றும் ஒரு கட்டம் - இது அடிப்படையான பாலியல் ரீதியான ஒரு வேகம்.
இது ஈர்ப்பு நிலைக்கு இட்டுச் சென்று பின்னர் உணர்வு ரீதியாக ஒன்று சேரும் நிலைக்கும் பின்னர் அதுவே நீண்ட கால உறவுக்கும் வழி வகுக்கிறது.
ஆனால், இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் வரவேண்டியதில்லை என்கிறார் ஆராய்ச்சியாளர் ஹெலன் ஃபிஷர். இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.
"உங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சகாவுடனோ அல்லது கல்லூரியிலோ அல்லது உங்கள் சமூக வட்டத்தில் இருப்பவர் ஒருவருடனோ உங்களுக்கு ஏற்படும் ஒரு வித ஆழமான பற்றை , நேசத்தை நீங்கள் உணரலாம். இது மாதங்கள் அல்லது சில ஆண்டுகளுக்குப் பின்னர், மேலும் கனிந்து மாற்றம் பெற்றும் திடீரென நீங்கள் அவர் மீது காதல் வயப்படுவீர்கள்" என்று ஃபிஷர் பிபிசியிடம் கூறினார்.எனவே பற்று முதலில் வருகிறது. அதன் பின்னர் மிகவும் ஆழமான காதல் , பின்னர் பாலியல் வேகத்துடன் தொடர்புள்ள உணர்வுகள் .... அல்லது நீங்கள் ஒருவரால் பாலியல் ரீதியாகக் கவரப்படலாம், அவர் மீது அதற்கு பின்னர் காதல் ஏற்படலாம், அதன் பின்னர் அவர் மீது ஆழமான பற்று அல்லது உணர்வுகள் ஏற்படலாம்.... அல்லது முதலில் ஒருவருடன் பாலியல் உறவு கொள்வதற்கு முன்னரேயே அவர் மீது நீங்கள் கண்மூடித்தனமாகக் காதல் கொள்ளலாம்" என்கிறார் அவர்.
இந்த ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொருவிதமான ரசாயனப் பொருட்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
காதல் படிகள் !
காமம்:
காமம் என்பது செக்ஸ் ஹார்மோன்களான டெஸ்டொஸ்டீரோன் (testosterone) மற்றும் ஈஸ்ட்ரோஜென் (oestrogen) போன்றவற்றால் உந்தப்படுகிறது. டெஸ்டொஸ்டீரோன் என்ற ஹார்மோன் ஆண்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது பெண்களின் பாலியல் உணர்வுகளிலும் பெரும் பங்கு வகிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஈர்ப்பு:
இந்தக் கட்டம் காதலில் வீழ்ந்து மற்ற எல்ல விஷயங்களையும் காதலர்களால் சிந்திக்கக்கூட முடியாத நிலை. அவர்கள் உண்மையில் பசியை இழப்பார்கள். தூக்கம் தேவைப்படாது. தங்கள் காதலரைப் பற்றியே பகல் கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.
இந்த ஈர்ப்பு கட்டத்தில் "மோனோமைன்கள்" (monoamines) என்றறியப்படும் நரம்புகள் மூலம் செய்திகளைச் சொல்லும் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன.டோபோமைன் (Dopamine) இது ஒரு வகை ரசாயனம். இது கோக்கெயின் மற்றும் நிக்கோட்டினோரெபின்ப்ரின் என்றவைகளால் தூண்டப்படுகிறது. இதற்கு அட்ரினலின் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதுதான் காதலர்கள் உடலில் வியர்வையை உருவாக்குவது, இதயத்தை படபடக்கச் செய்வது போன்ற வேலைகளைச் செய்யும் பொருள்.
செரொட்டோனின் என்ற மற்றொரு ரசாயனம் காதல் விவகாரத்தை ஏற்படுத்தும் ரசாயனங்களில் மிகவும் முக்கியமானது. இதுதான் காதல் வயப்பட்டவர்களை தற்காலிகமாக பைத்திய நிலைக்குத் தள்ளும் வில்லன் !
பற்று, பாசம்:
இந்த கட்டம் ஈர்ப்புக் கட்டத்துக்கு அடுத்து ஏற்படுவது. அந்த உறவு நீடிக்கவேண்டுமென்றால் இந்த பற்று மிகவும் அவசியம். ஈர்ப்பு நிலை தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளைத் தவிர வேறொன்றும் உற்பத்தி ஆகாது!இந்த "பற்று" கட்டத்தில், இரண்டு ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. நரம்பு மண்டலத்தில் சுரக்கும் இந்த இரு ஹார்மோன்கள் சமூகப் பற்றை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
இது தவிர வேறு இரண்டு ரசாயனன்கள் உடலில் விளையாடுகின்றன.
வேசோப்ரெஸ்ஸின் (Vasopressin):
நீண்ட கால உறவு என்ற கட்டத்தில் ஒரு முக்கிய ரசாயனம் இது. இந்த ரசாயனம் ஆண்களால் அடக்கப்படும்போது, காதலர்களுக்கிடையே நிலவும் பந்தம் உடனடியாகக் குறைகிறது.
விசுவாசம் இழப்பது, துணைவரை( அல்லது துணைவியை) புதிய காதலர்களிடமிருந்து பாதுகாக்கத் தவறுவது போன்றவை இதனால் ஏற்படுகின்றன.ஆக்ஸிடோசின் (Oxytocin) என்ற இந்த ரசாயனம் ஹைபொதலாமஸ் என்ற சுரப்பியால் வெளியிடப்படுகிறது. இது குழந்தைப் பேறு காலத்தின் போது சுரக்கிறது. இதுதான் தாய்ப்பால் உருவாக உதவுகிறது. இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பந்தம், பிணைப்பு ஏற்பட உதவுகிறது.
இது காதலர்கள் அல்லது தம்பதியர் இருவர் உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் "பாலியல் உச்சகட்ட" நிலையிலும் வெளியாகிறது. இதுதான் வயது வந்தவர்களுக்கு இடையே பிணைப்பு ஏற்பட உதவுவதாகக் கருதப்படுகிறது.
அதிகம் உடலுறவு கொள்ளக் கொள்ள, தம்பதியருக்கிடையே பிணைப்பு ஆழமாகிறது என்கிறது இந்தக் கருத்தாக்கம் !
"ஆதலினார் காதல் செய்வீர் உலகத்தீரே", எனலாமா ?
மீண்டும் தலை தூக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்?
ஈராக்கின் பல பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்து அட்டூழியம் செய்து வந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த ஆண்டு இறுதியில் ஈராக் அறிவித்தது. இந்நிலையில், கிர்குக் பகுதியில் ஈராக்கிய அரசுப்படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அல்-சாத்வுன்யா பகுதியில் திடீரென ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி சரமாரி தாக்குதல்களை நடத்தினர். சில மணிநேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில் 27 ஈராக் வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை தங்களது இயக்கத்தினர் நடத்தியதாக ஐ.எஸ் இயத்தின் ஊடகமான அமாக் செய்தி வெளியிட்டுள்ளது.
அல்-சாத்வுன்யா பகுதியில் திடீரென ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி சரமாரி தாக்குதல்களை நடத்தினர். சில மணிநேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில் 27 ஈராக் வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை தங்களது இயக்கத்தினர் நடத்தியதாக ஐ.எஸ் இயத்தின் ஊடகமான அமாக் செய்தி வெளியிட்டுள்ளது.
சலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள்!
இன்னுமொரு மரணமாய் நிகழ்ந்திருக்கிறது விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி சந்திரச்செல்வனின் மரணம். தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் அடிபட்டுக் கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளின் பக்கம் உண்மையாய் யார் இருக்கின்றனர் என சண்டை போட்டுக்கொண்டிருந்தோம். இந்த சண்டை நடந்தபோதே இந்த வீரரின் மரணமும் சலனமின்றி நிகழ்ந்திருக்கிறது. இப்போழுதெல்லாம் பத்திரிகைகளிலோ, இணையத்தளங்களிலோ முன்னாள் போராளிகள் மரணம் என்ற செய்தி வெறும் செய்தியாகிவிட்டது. ரெஸ்ட் இன் பாஸ்ட் என்றுவிட்டு கடந்து சொல்லுகிறோம். இதே வீரர்கள் அன்று களத்தில் சண்டையிட்டு சந்தனப் பேழைகளில் கொண்டு செல்லப்பட்டபோது நிறையுவும் சிந்தித்தோம். நிறையவும் கலைப்பட்டோம். இன்றும் அவர்கள் ஒரு களத்தில் வீழ்கின்றனர் என்ற நுண் அரசியலை புரிந்துகொள்ள மறுக்கிறோம். ஒரு மரணம் நடைந்தால் அது பற்றி விசாரணை செய்யப்படும். திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவரை இலங்கை அரசாங்கம் பிரதேசத்திற்கு பிரதேசம் பணியமர்த்தியுள்ளது. ஆனால் தொடர்ச்சியாக பல்வேறு விதமான நோய்கள் காரணமாகவும் மர்மமாகவும் முன்னாள் போராளிகள் இறக்கின்றனர். இந்தக் கூட்டு மரணங்கள் குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவுதும் எடுக்கப்படவில்லை. எல்லாமே சாதாரண மரணங்கள்தான் என கடந்து செல்லும் அரச இயந்திரத்தை விடுவோம். நாம் என்ன செய்கிறோம்? இந்த மரணங்கள் எல்லாவற்றையும் வெறும் மரணங்களாய் கடந்து செல்ல நிர்பந்திப்பது எவ்வளவு குரூரமானது. ஈழத்தில் போர் முடிக்கப்பட்ட பின்னர் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்ட போராளிகள் இரண்டு, மூன்று, நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்கள். தடுப்பு முகாம் என்பது புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட மாபெரும் வாதை முகாம் என்ற உண்மையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அங்கிருந்து வெளிவந்த பின்னர் சில போராளிகள் பல்வேறு நோய்களில் இறந்த சம்பவங்கள் ஈழத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணி என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியது. இலங்கை அரசு சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையில் அதனைக் குறைக்கும் முகமாக இந்த செயலணி, வடகிழக்கு ஈழ மக்களிடையே அமர்வுகளை நடத்தி நல்லிணக்கத்திற்கான ஆலோசனைகளை கோருவதாக கூறியது. இந்த நிலையில் குறித்த செயலணியின் கருத்தறியும் அமர்வில் ஒரு முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய சாட்சியமே இலங்கை அரசை மற்றுமொரு இன அழிப்பு குற்றத்தில் தள்ளியது. தமக்கு தடுப்பில் வைத்து ஊசிகள் ஏற்பட்டதாகவும் அவை தமது உடல் வலுவை பாதிக்கும் விச ஊசிகளாக இருக்கலாம் என்று தாம் அஞ்சுவதாகவும் அதன் பின்னர் உடலில் மாற்றங்களை உணர்ந்ததாகவும் அந்த முன்னாள் போராளி குறிப்பிட்டார். அப் போராளியின் சாட்சியம் “கிரேசிமா நாகசாயி வரலாற்றை எடுத்துக்கொண்டா் கூட கண்டிப்பா இன்றைக்கும் அமெரிக்காவிற்கு இழுக்குத்தான். எங்கண்ட விரலை வெட்டிப்போட்டு தம்பி தெரியாம வெட்டீட்டன் நான் அம்பு வில்லு தாறன் உன்னை பாதுகாக்க என கூறுவது போலத்தான் அரசின் செயற்பாடுகள் இருக்கின்றன. விடுதலைப் புலிகள் இவ்வாறான வேலையைச் செய்யவில்லை. யுத்த தர்மம் என்று ஒன்று உள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்க இராணுவத்திற்கு யுத்த தர்மத்தைப் பற்றி கடைசிவரை போதிக்க வேண்டும். சரணடையப்போறவங்களைச் சுடுவது நியாமமில்லை. ஏனெனில் அவர்கள் நிராயுதபாணிகள். நான் ஒரு முனைநாள் போராளி. தடுப்பால வந்த பிறகு நாங்கள் யுத்தங்களை விட்டு ஒதுங்கி இருக்கிறம். சொன்னாலும் சொல்லாட்டாலும் உவங்கள் எங்களிற்கு இரசாயண உணவுகளைத் தந்திருக்கிறாங்கள் என்பது எங்களிற்கு விளங்குகின்றது. நான் முன்பு 100 கிலோ தூக்கி எத்தினயோ கிலோமீற்றர் ஓடுற எனக்கு ஒரு பொருளைக்கூட தூக்க முடியவில்லை. கண் பார்வை குறைகின்றது. எங்களிற்கு ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் விழங்குகின்றது. ஏன் தடுப்பு மருந்து முழுப்பேருக்கும் ஏற்றினவங்கள். ஊசியைக் கொண்டுவந்து போடுவாங்கள். என்ன தடுப்பிற்காக ஏற்றினார்கள் என்று எமக்குத் தெரியாது. ஊசி ஏற்றிய அன்று மாலையே ஒரு போராளி இறந்துவிட்டார். அங்கு என்ன என்ன நடந்தது என்று எங்களிற்கு மட்டும்தான் தெரியும். நாங்கள் தலைவரின் உப்பைச் சாப்பிட்டு வளர்ந்தவர்கள். கருணா மாறினாலும் நாங்கள் மாறவில்லை. 12 ஆயிரம் போராளிகளிற்கும் நீங்கள் மறுவாழ்வு அளித்தீர்கள் என்றால்தான் இந்தப் போராட்டம் திரும்ப துளிர்க்காது ”குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையில் மகளீர் பொறுப்பாளராக இருந்த தமிழினி 2013இல் விடுவிக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளின் பின்னர் புற்றுநோயில் இறந்தார். அவரது மரணம் இடம்பெற்ற நாட்களில் புதுக்குடியிருப்பை சேர்ந்த மற்றுமொரு முன்னாள் போராளி திடீரென மயக்கமுற்ற நிலையில் இறந்தார். அத்துடன் அதற்கு முன்னரும் பின்னரும் சில முன்னாள் போராளிகள் மரணமடைந்தமையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றன. தமிழினி அவர்களின் மரணம் இடம்பெற்றுச் சில நாட்களில் கிளிநொச்சியில் கௌரி என்ற முன்னாள் போராளி புற்றுநோயில் இறந்தார். இவ்வாறு முன்னாள் போராளிகள் புற்றுநோயினாலும் வேறு பல மரணங்களாலும் இறந்த செய்திகள் ஏனைய முன்னாள் போராளிகளின் மத்தியிலும் ஈழை மக்களிடத்திலும் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தின. தமிழினி விடுதலைப் புலிகளின் காலத்தில் ஓய்வற்று பணியாற்றியமையால்தான் புற்றுநோய் வந்து இறந்தார் என்று அவரது கணவர் வாதிட்டதுடன் இவ்வாறான சந்தேகங்கள் அரசியல் பிழைப்புக்கானவை என்று கூறியிருந்தார். ஈழ மக்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய போராளிகளின் தொடர் மரணங்கள் மக்களை சந்தேகத்திற்குள்ளாக்குவது இயல்பானது. அதனை மருத்துவ ரீதியாக நிரூபிப்பது மருத்துவதுறை சார்ந்தவர்களின் வேலை. இந்த நிலையில் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளத்தை சேர்ந்த சோமசுந்தரம் டிகுணதாசன் என்ற முன்னாள் போராளியும் நோய்வாய்ப்பட்டு இறந்தார். அவரது நோய் குறித்தும் மர்மம் காணப்பட்டதாக அவரது நண்பர்கள் கூறினார்கள். வவுனியா நெடுங்கேணி குழவிசுட்டான் பகுதியில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையரான முன்னாள் போராளி ஆசீர்வாதம் ஸ்ரிபன் (வயது 36), சாவடைந்தார். புளியங்குளம் சந்தியில் பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது, திடீரென மயக்கமடைந்து கீழே அவர் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வழியில் இவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த இனியன் என்ற முன்னாள் போராளி (2.01.2017) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 34வயதான ரிசிகரன் என்ற இயற்பெயரை உடைய இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை. கடன் பிரச்சினையால் இவர் தற்கொலை செய்து கொண்டார் என இவரது மனைவி கூறினார். அத்துடன் முல்லைத்தீவு, வற்றாப்பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளி இராசதுரை திக்சன் (வயது 26) ( 2016-12-11) சுகவீனம் காரணமாக திருகோணமலை குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். விடுதலைப்புலிகளின் அரசியல்துறை கோட்டப் பொறுப்பாளராக இருந்த முன்னாள் போராளி வவுனியா மாமடு- சேனைப்பிலவைச் சேர்ந்த பிறையாளன் என்று அழைக்கப்படும் 42 வயதுடைய இரத்தினசிங்கம் ஆனந்தராசா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் திடீரென வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக சாவடைந்தார். இறுதி யுத்தத்தினால் விழுப்புண்னடைந்து சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி செல்வம் என்றழைக்கப்படும் மயிலன் மோகன் 10.12.2015 அன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இறுதி யுத்தத்தில் மிக மோசமாகப்பாதிக்கப்பட்டு விழுப்புண்னடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாவடைந்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மாலதிபடையணியின் முன்னாள்போராளியும், மணலாறு கட்டளைத் தளபதியாக இருந்த குமரன் என்பவரின் துணைவி சந்தியா எனப்படும் முன்னாள் போராளியே தாய்லாந்தில் அக்டோபர் முதல்வாரம், 2017 சாவடைந்தார். இவர் விடுதலைப் புலிகளின் மாலதி படையணியில் இணைந்து தாயகவிடுதலைக்காக போராடியவர். சிறந்த படைப்பாளியாகவும் விளங்கியவர். காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ். குரும்பசிட்டிப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி இராசரத்தினம் ஸ்ரீபவன் (வயது – 40) ஜீலை 31,2017 அன்று உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் உடல் நிலை மோசமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தபோதும் பலனின்றி உயிரிழந்துள்ளார். இறக்கும் முன்னர் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளமை கண்டறியப்பட்டது. பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி அமலதாஸ் (வயது46) நவம்பர் 3, 2016 அன்று திடீரென மரணித்துள்ளார். உறவினர்களுடன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து ஓய்வு எடுப்பதற்காக படுக்கைக்காக சென்ற வேளை திடீரென மயக்கமுற்று கீழே விழுந்து மரணமடைந்துள்ளார். இவர் மயக்கத்துடன் தான் இருக்கின்றார் என நினைத்து புளியங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதே மரணமடைந்தமை தெரியவந்தது. 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட இவரது மரணம் தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இவரது மனைவி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானின் சாரதி முன்னாள் போராளி ராகுலன் என்றழைக்கப்படும் சசிகுமார் ஜூலை 15, 2016 திடீர் மரணம் அடைந்தார். அத்துடன் திருகோணமலை மாவட்டம் புலத்தினைச் சேர்ந்த மொராவகன் புலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி பேரின்பராசா தனபாலசிங்கம் (40) என்ற 4 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி ஓகஸ்ட் 2, 2016 அன்று அனுராதபுரம் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். விபத்தினால் பாதிக்கப்பட்ட இவருக்கு தலையில் விறைப்புத் தன்மை காணப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து விடுதலைக்காக போராடி கடந்த 2013ஆம் ஆண்டு புனர்வாழ்வின்பின் தனபாலசிங்கம் விடுதலையானார். போராளிகளின் சமூக இன பற்றை அழிக்கும் உளவியல் போர் ஒன்றே புனர்வாழ்வு என்ற தடுப்பு – வாதை முகாமின் நோக்கமாகும். அத்துடன்
வதைமுகாமின் அறிவிப்பு, முள்வேலி, படைகளின் அணுகுமுறை, வழங்கப்படும் உணவு, தங்கியிருந்த அறைகள், பிரிக்கப்பட்ட முறைகள் எனப் பலவும் நூதனமாக அக வாதைகள் சார்ந்தது என்பதை வெற்றிச் செல்வி தன்னுடைய ஆறிப்போன காயங்களின் வலி (பம்பைமடு வதை முகாம் தொடர்பான பதிவு) புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். திருகோணமலையில் சிங்கள அரசின் பாரிய இன அழிப்பு வதைமுகாங்கள் இருந்த விவகாரமமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பல முன்னாள் போராளிகளும் ஈழ மக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளும் வந்து பார்வையிட்டுள்ளார்கள். புனர்வாழ்வில் இருந்தபோது தமக்கு புரயிலர் கோழிகளே அதிகமும் – பெரும்பாலான நாட்கள் தமக்கு வழங்கப்பட்டதாக முன்னாள் போராளி ஒருவர் சொன்னார். தடுப்பில் இருந்தபோது வழங்கப்பட்ட அப்பிள், ஒரேஞ்சுப் பழங்களை சாப்பிட வேண்டாம் என்று வெளியில் இருந்த சில மருத்துவர்கள் கூறியதாக இன்னுமொரு முன்னாள் போராளி சொல்லியிருந்தார். ஆனால் தடுப்பில் இருந்த நிலையில் இருந்த விரக்தி, அழுத்தம் காரணமாக இதை குறித்தெல்லாம் யோசிக்கும் நிலையில் தாம் இருக்கவில்லை என்று முன்னாள் போராளிகள் குறிப்பிடுகிறார்கள். இறுதிப் போரின் பின்னர், வதை முகாங்களிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழும் முன்னாள் போராளிகள் பலரும் பல உடல் நோய்களுக்கு ஆளாகியிருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சு முன்னாள் போராளிகள் மருத்து ஆய்வுக்கு பெயர்களை பதிவு செய்யுமாறு கோரியது. பல முன்னாள் போராளிகள் தமது உடலை ஆய்வு செய்ய பெயர்களை பதிவு செய்துள்ளனர். மனம் தளராமல் அனைத்து முன்னாள் போராளிகளும் இந்த ஆய்வுக்கு முன்வரவேண்டும் என்றும் வடக்கு சுகாதார அமைச்சு கூறியது. அத்துடன் உயிரிழந்த முன்னாள் போராளிகளின் விபரங்களும் மருத்துவம் பெற்றவர்களின் விபரங்களையும் வடக்கு அரசு திரட்டியது. எனினும் கரிசனை பூர்வமாக வடக்கு மாகாண அரசு இதில் ஈடுபடவில்லை. இன்னமும் போராளிகளின் மரணங்கள் நீடிப்பதற்கான காரணத்தை கண்டறியவில்லை. சாதாரணமாகவே முன்னாள் போராளிகள் தம்மை அழித்துக்கொள்ளும் ஒரு சூழலுக்குள்தான் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் தோல்விகள், நீதியற்ற நடவடிக்கைகள், சமூக நெருக்கடிகள் என்பன அவர்களை பெரும் அழுத்தத்திற்குள் தள்ளுகின்றன. பெருமளவான முன்னாள் போராளிகளின் தற்கொலை மரணங்கள் இதன்பாற்பட்டே நிகழ்ந்துள்ளன. இதற்கான பொறுப்பை வெறுமனே சிங்கள அரசிடம் மாத்திரம் தள்ளிவிட முடியாது. முன்னாள் போராளிகளுக்கு அவர்களின் கல்வி அறிவுக்கு ஏற்ப அரச தொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் வாழ்வாதரக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் வடக்கு கிழக்கு மாகாண சபைகள் முனைந்திருக்க வேண்டும். வேலையின்மை, இராணுவ நெருக்கடி, உடல் நோய்கள் என மன அழுத்தங்களின் மத்தியில் வாழ்ந்த முன்னாள் போராளிகளையும் எதனையும் அறியாமல், உணராமல் வாழ்ந்த முன்னாள் போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் விச ஊசி குறித்த செய்திகள் மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளன. வவுனியாவில் நடந்த சிறிலங்கா அரசின் கருத்தமர்வில் முன்னாள் போராளி ஒருவர் சாட்சியம் அளிக்கையில் இந்தச் செய்தி தம்மை மீண்டும் பெரும் உளவியல் தாக்கத்திற்கு உட்படுத்தியிருப்பதாக கூறினார். தானும் உடல் ரீதியாக மாற்றங்களை உணர்வாதாகவும் ஆனால் இந்த செய்திகளால் மேலும் பாதிக்கப்பட்டு தமது வாழ்வும் குடும்பமும் இன்னும் பாதிக்கலாம் என்றும் இருக்கும்வரை எதையும் அறியாமல் இருப்போம் என்றும் அவர் கூறினார். மதுப்பழக்கம், புகைத்தல் பழக்கம் இல்லாத முன்னாள் போராளிகளுக்கு எவ்வாறு புற்றுநோய் ஏற்பட முடியும் என்று இலங்கை பராளுமன்றத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பினர். இதுவரையில் 107 போராளிகள் இறந்துள்ளதாகவும் அவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் இது தொடர்பில் சர்வதேச கண்காணிப்புடன் மருத்துவ பரிசோதனை இடம்பெறவேண்டும் என்றும் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். விச ஊசி போட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி தவிசாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்திருந்தார். முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பில் உடனடி விசாரணைக்கு ஜனாதிபதியை கோருவேன் என்று அமைச்சர் சுவாமிநாதன் கூறியிருந்தார். ஆனால் இலங்கை அரசாங்கம் ஆய்வுகள், பரிசோதனைகள் எதுவும் இடம்பெறாமலே இராணுவ ரீதியான நம்பிக்கை மற்றுத் பௌத்த மத ரீதியான நம்பிக்கையின்பால் பேசுவதாக தோரணை செய்துகொண்டு மறுப்பு வெளியிட்டது. முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்ற வேண்டிய தேவை இல்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. தமது புனர்வாழ்வு நடவடிக்கையை சர்வதேசம் வந்து பார்வையிட்டதாகவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன கூறினார். இலங்கை அரசு தான் இழைத்த குற்றங்களை எப்போது ஒப்புக்கொண்டது? முள்ளிவாய்க்காலின் இறுதிநாட்களில் சிறிலங்கா அரச படைகள் இழைத்த இனப்படுகொலைக் குற்றங்களை – சாட்சியங்களை – ஆதாரங்களை பார்த்தவர்களுக்கு சிறிலங்கா அரசு பூச் சுற்ற முடியாது. சிங்கள அரசு எதனையும் செய்யும். தமிழ் இனத்தையும் ஈழப் போராளிகளையும் அழிக்க சிங்கள அரசு எதனையும் செய்யும் என்பதே கடந்த கால வரலாறு. ‘இந்த குற்றச்சாட்டை முழுமையாக இலங்கை இராணுவம் மறுக்கிறது, நிராகரிக்கிறது என்றும் இலங்கையானது பௌத்தத்தை பிரதானமாகவும் ஏனைய மதங்களை முக்கியமானதாகவும் மதிக்கின்ற பின்பற்றுகின்ற ஒருநாடு என்றும் எமது இராணுவம் ஒரு மிருகத்திற்குக்கூட விஷத்தைக் கொடுத்ததில்லை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர கூறினார். இவ்வாறு இவர் கூறினாலும் ஈழ இறுதிப் போரில் கொத்துக் குண்டுகளை போர் தவிர்ப்பு வலயங்கள்மீது சிங்கள இராணுவம் வீசியதையும் நஞ்சுக் குண்டுகள் அடித்து மக்களையும் போராளிகளையும் பரிதாபகரமாக இனப்படுகொலை செய்ததையும் உலகமே அறியும். புற்றுநோயை திட்டமிட்டு உருவாக்க முடியும் என்றும் இதன் அண்மைய உதாரணம் அலக்ஸ்சாண்டர் லிற்வினஸ்கோ ((Alexander Litvinenko) ரஸ்யா உளவுத்துறையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட புற்றுநோயினால் இவர் 2006 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் இறந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. ரஸ்யாவின் புலனாய்வுத்துறையில் (Federal Security Service (FSB) and KGB) அதிகாரியாக ரஸ்யாவின் அரச தலைவர் விளமிடீர் பூட்டினுடன் பணியாற்றிய அலக்ஸ்சாண்டர் லிற்வினஸ்கோ அங்கிருந்து தப்பிச்சென்று பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்து, பிரித்தானியாவின் உளவுத்துறையினருக்கு தகவல்களை வழங்கும் நபராக மாறியதால் அவரை புற்றுநோயிற்கு உள்ளாக்கி கொன்றதாக கூறப்படுகின்றது. போரில் ஈழத் தமிழர்களை பல்வேறு வழிமுறைகளில் இலங்கை அரசு கொன்றது. உணவை தடுத்து, மருந்துகளை தடை செய்து, போர் தவிர்ப்பு வலயங்கள்மீது அனல் தாக்குதல்களை நடத்தி, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவரும் கொன்று வீசப்பட்டனர். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுக்கொன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. சரணடைந்த போராளிகளை நிர்வாணமாக்கி தரையில் இருந்தித பின் பக்கமாக சுட்டுக்கொன்றதும் பெண் போராளிகளை பாலியல் வன்கொடுமை புரிந்து கொன்றதும் நடைபெற்றது. போரின் பின்னர் வடகிழக்கில் திட்டமிட்டு இன விருத்தியை தடுக்க கருத்தடைகள் இடம்பெற்றமையும் அம்பலமானவை. இலங்கை அரசு ஈழ தமிழ் இனத்தை அழிக்க எதை வேண்டுமானாலும் செய்யும் என்பதையே கடந்தகால வரலாறு உணர்த்துகிறது. நடந்து முடிந்த இனப்படுகொலை குறித்து மாத்திரமின்றி தற்போது மர்மமாக தொடரும் முன்னாள் போராளிகள் குறித்தும் நீதியான சர்வதேச விசாரணை ஒன்றே அவசியமானது. வரலாறு முழுவதும் தமிழ் இனம் அழிக்கப்பட்டமைக்கான காரணங்களை கண்டறிவதும் அவர்களின் நிலம் இன்ன பிற உரிமைகள் மறுக்கப்பட்டமைக்கான காரணங்களுக்கு மாத்திரமின்றி இனப்படுகொலைப் போரின் பாதிப்பால் தொடரும் இன அழிப்பு மரணங்களையும் குறித்தும் உண்மையை கண்டறிதலுக்காக சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தும் தமிழரின் போராட்டம் வலுவாக முன்னெடுக்கப்படவேண்டும்.
தமிழர்கள் தமிழில் மொழியில் இணையதளங்களை அவசியம் உருவாக்க வேண்டும்
தமிழர்கள் தமிழில் மொழியில் இணையதளங்களை அவசியம் உருவாக்க வேண்டும்
கூகுல் அட் சென்ஸ் தமிழ் மொழியை அங்கீகரித்துள்ளது
கூகுல் அட் சென்ஸ் தமிழ் மொழியை அங்கீகரித்துள்ளது கூகுல் நிறுவனம் இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .இலங்கையில் பேசப்படும் மொழிகளில் தமிழ்மொழி மாத்திரமே அங்கீகரித்துள்ளது
இந்தோனேசியாவில், கிறிஸ்தவர்கள் மீது கத்திக்குத்து
இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். அதே நேரத்தில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களும், இந்துக்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளனர்.
சமீப காலமாக அங்கு மத அடிப்படையிலான பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. தேசிய அளவில் மத சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தித்தான் இந்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், அங்கு உள்ள யோக்யகர்த்தா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையையொட்டி கத்தோலிக்க தேவாலயத்துக்கு வழிபாடு நடத்த சென்ற கிறிஸ்தவர்கள் 4 பேர் கத்தியால் சரமாரி குத்தப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
“இந்த சம்பவம், பயங்கரவாத தாக்குதலா என்பதை உடனடியாக உறுதி செய்ய முடியாது, தாக்குதல் நடத்திய நபரை பிடித்து விட்டோம், அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
தாக்குதல் நடத்திய நபரை பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் அவர் பல்கலைக்கழக மாணவராக இருக்கக்கூடும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம், யோக்யகர்த்தா நகரில் வசிக்கிற கிறிஸ்தவ மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக அங்கு மத அடிப்படையிலான பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. தேசிய அளவில் மத சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தித்தான் இந்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், அங்கு உள்ள யோக்யகர்த்தா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையையொட்டி கத்தோலிக்க தேவாலயத்துக்கு வழிபாடு நடத்த சென்ற கிறிஸ்தவர்கள் 4 பேர் கத்தியால் சரமாரி குத்தப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
“இந்த சம்பவம், பயங்கரவாத தாக்குதலா என்பதை உடனடியாக உறுதி செய்ய முடியாது, தாக்குதல் நடத்திய நபரை பிடித்து விட்டோம், அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
தாக்குதல் நடத்திய நபரை பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் அவர் பல்கலைக்கழக மாணவராக இருக்கக்கூடும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம், யோக்யகர்த்தா நகரில் வசிக்கிற கிறிஸ்தவ மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
HP கொம்பியூட்டர் பற்ரி திருத்துவது எப்படி ?
உங்களது கொம்பியூட்டர் பற்ரி வேலை செய்யவில்லையா கவலை வேண்டாம்,அதன் விலை மிக உயர்வாக இருக்கலாம் இந்த காணொளியில் நீங்களே அதனை சரிசெய்யும் முறையுள்ளது இதன மூலம் மலிவாக சரி செய்யலாம்
புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை Song
பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங் சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும் ஒலியெல்லம் அட சரிகமபதனிசரி (பூப்பூக்கும் ஓசை) கண்தூங்கும் நேரத்தில் மௌளனத்தின் ஜாமத்தில் கடிகாரச் சத்தம் சங்கீதம் கண்காணா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில் ரயில் போகும் ஓசை சங்கீதம் பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை (2) சந்தோஷ சங்கீதம் தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி பாலுண்ணும் சத்தம் சங்கீதம் ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே கொரே கொரே பைய்யா ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா (பூப்பூக்கும் ஓசை) சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம் கரைகொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து கைதட்டும் ஓசை சங்கீதம் காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை (2) சிருங்கார சங்கீதம் முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும் தவளைக்கள் ஓசை சங்கீதம் ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே ஜோரி ஜோரி பைய்யா ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா (பூப்பூக்கும் ஓசை)
விஜயின் அதிரடி அறிவிப்பால், கலங்கி போன அரசியல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் விளங்கி வருபவர் தளபதி விஜய், இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-62 படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே தீவிர அரசியலில் குதித்து விட்டனர், இவர்களை தொடர்ந்து தளபதி விஜயும் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டே உள்ளன.இந்நிலையில் தற்போது விஜயும் ரஜினியை போலவே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஒருங்கிணைக்க www.vijaymakkaliyyakam.in என்ற இணையதளம் தொடங்கியுள்ளார்.
விஜயின் இந்த நடவடிக்கையால் அரசியல் வட்டாரமே சற்று அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது, இதனால் தளபதி விஜயும் அரசியலில் நுழைய உள்ளாரோ என பலர் குழப்பமடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே தீவிர அரசியலில் குதித்து விட்டனர், இவர்களை தொடர்ந்து தளபதி விஜயும் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டே உள்ளன.இந்நிலையில் தற்போது விஜயும் ரஜினியை போலவே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஒருங்கிணைக்க www.vijaymakkaliyyakam.in என்ற இணையதளம் தொடங்கியுள்ளார்.
விஜயின் இந்த நடவடிக்கையால் அரசியல் வட்டாரமே சற்று அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது, இதனால் தளபதி விஜயும் அரசியலில் நுழைய உள்ளாரோ என பலர் குழப்பமடைந்துள்ளனர்.
நாட்டைத் துண்டாடவோ, பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது
நாட்டைத் துண்டாடும் அல்லது பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சிலரால் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும் நாட்டை துண்டாடவோ அல்லது பிளவுபடுத்தவோ தான் ஒருபோதும் தயாராக இல்லை என்பதுடன் எவருக்கும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலன்னறுவை செவனபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொய்ப் பிரசாரங்களிலும் சந்தர்ப்பவாத அரசியல் தந்திரோபாயங்களிலும் இன்று நாட்டு மக்கள் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதுடன் நாடு பயணிக்கும் பாதையை அவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று நாட்டிற்கு தேவையாக இருப்பது மன்னராட்சி முறையன்றி மக்களாட்சி முறையே ஆகும் என்பதுடன் இதனையே மக்களும் எதிர்பார்க்கின்றனர் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அத்தகையதொரு அரசியல் மற்றும் சமூக மாற்றத்தினை நாட்டில் ஏற்படுத்தவே கடந்த மூன்று வருட காலமாக தாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஊழல் அரசியல்வாதிகள் இன்று ஒரே குழுவாக இணைந்திருக்கின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுடன், அவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காகவோ அல்லது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவோ அன்றி தமது தனிப்பட்ட அபிவிருத்திக்காகவே அதிகாரத்தைக் கேட்கின்றனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும், அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்து அரச வளங்களை அழிவடையச் செய்யும் அரசியல்வாதிக்கு எதிராக கடந்த ஆட்சி காலத்தில் எதுவித நடவடிக்கைகளும் அப்போதைய தலைவர்களால் மேற்கொள்ளப்படாததுடன், அவற்றைப் பற்றி உரையாட கூட அவர்கள் விரும்பவில்லை என்பதனால் கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழல், மோசடிகள் அதிகரித்திருந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் என்றவகையில் தான் மத்திய வங்கி தலைமையகத்தில் இடம்பெற்ற அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளைப் பற்றிய கலந்துரையாடலில் பங்குகொண்டபோது அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பாக உரையாடியமையினால், மறுநாள் காலை அலரிமாளிகைக்கு தன்னை அழைத்த முன்னாள் தலைவர் அரசாங்கத்தின் அமைச்சர் என்றவகையிலும் கட்சியின் பொதுச்செயலாளர் என்றவகையிலும் அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பாக பேசக்கூடாது எனவும் வேறு பயணமொன்றை மேற்கொள்ள தயாராகின்றீர்களா என தம்மிடம் கேட்டதாகவும் இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் செயற்படுவது மாத்திரமன்றி அது தொடர்பாக பேசக்கூட முடியாது எனில் மக்களின் நன்மைக்காக தனியானதொரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என தான் அன்று உறுதியாக தீர்மானித்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் செயற்படுகையில் கட்சி, நிறம், பதவி, உறவுகள் மற்றும் நட்பு என்ற எந்தவொரு விடயத்தையும் கருத்திற்கொள்ளாததுடன், இன்று நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது தமது சகோதரர்களுக்கும் அவ்விதமே நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை தான் செயலில் தற்போது காட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் திம்புலாகல பிரதேச சபைக்கு போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதேசத்தின் மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மத தலைவர்கள், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன, என்.பி.சமந்த உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதனிடையே பொலன்னறுவை கலஹகல ஸ்ரீதர்மராஜ விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு தொகுதி இன்று முற்பகல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.
“கருணை ஆட்சி – நிலையான நாடு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் ஆரோக்கியமான அளித்து, நோயற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சிறுநீரக நோய் நிவாரண தேசிய செயற்திட்டம் மற்றும் ஜப்பான் கூட்டமைப்பின் பிரதான நிறைவேற்றதிகாரி கலாநிதி மிட்சுகி சுகியின் அன்பளிப்பில் இந்த நீர் சுத்திகரிப்புத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
”எழுச்சி பெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் கலஹகல ஸ்ரீ தர்மராஜ விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய அறநெறி பாடசாலைக் கட்டிடமும் இதன்போது ஜனாதிபதியால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.விகாராதிபதி பொலன்னறுவை பிரதேச பிரதான சங்க நாயக்கர் குருவாஓயே தம்மசித்தி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரால் பிரித் பாராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு இதன்போது ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
அதன்பின்னர் பொலன்னறுவை திம்புலாகல பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்புக்கள் பலவற்றிலும் இன்று ஜனாதிபதி பங்குபற்றினார்.
முதலாவதாக திம்புலாகல, கல்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
அதன்பின்னர் யாய 08 அரச மரத்தருகே இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
ஜனாதிபதி, 1989 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், பொலன்னறுவை மக்களுக்காக மேற்கொண்ட முதலாவது அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாய 08 பாலத்தின் அருகே இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு பிரதேச மக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் யாய 05 ஸ்ரீ விசுத்தாராம விகாரைக்கு அருகே இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
அரலகங்வில மற்றும் விஜயபாபுர வட்டாரங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்பின்னர் அரலகங்வில, அரசமர சந்தியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தம்மால் ஆரம்பிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மிகுந்த வினைத்திறனுடனும் துரிதமாகவும் இடம்பெற்று வருவதாக வலியுறுத்தினார்.
ஊழல், மோசடி மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக செயற்பட்ட உலக தலைவர்களுடன் அந்நாட்டு மக்களும் இணைந்து கொண்டுள்ளதைப் போல தாமும் மக்களுடன் இணைந்து ஊழல், மோசடி மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லவுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பொலன்னறுவை செவனபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொய்ப் பிரசாரங்களிலும் சந்தர்ப்பவாத அரசியல் தந்திரோபாயங்களிலும் இன்று நாட்டு மக்கள் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதுடன் நாடு பயணிக்கும் பாதையை அவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று நாட்டிற்கு தேவையாக இருப்பது மன்னராட்சி முறையன்றி மக்களாட்சி முறையே ஆகும் என்பதுடன் இதனையே மக்களும் எதிர்பார்க்கின்றனர் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அத்தகையதொரு அரசியல் மற்றும் சமூக மாற்றத்தினை நாட்டில் ஏற்படுத்தவே கடந்த மூன்று வருட காலமாக தாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஊழல் அரசியல்வாதிகள் இன்று ஒரே குழுவாக இணைந்திருக்கின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுடன், அவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காகவோ அல்லது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவோ அன்றி தமது தனிப்பட்ட அபிவிருத்திக்காகவே அதிகாரத்தைக் கேட்கின்றனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும், அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்து அரச வளங்களை அழிவடையச் செய்யும் அரசியல்வாதிக்கு எதிராக கடந்த ஆட்சி காலத்தில் எதுவித நடவடிக்கைகளும் அப்போதைய தலைவர்களால் மேற்கொள்ளப்படாததுடன், அவற்றைப் பற்றி உரையாட கூட அவர்கள் விரும்பவில்லை என்பதனால் கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழல், மோசடிகள் அதிகரித்திருந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் என்றவகையில் தான் மத்திய வங்கி தலைமையகத்தில் இடம்பெற்ற அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளைப் பற்றிய கலந்துரையாடலில் பங்குகொண்டபோது அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பாக உரையாடியமையினால், மறுநாள் காலை அலரிமாளிகைக்கு தன்னை அழைத்த முன்னாள் தலைவர் அரசாங்கத்தின் அமைச்சர் என்றவகையிலும் கட்சியின் பொதுச்செயலாளர் என்றவகையிலும் அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பாக பேசக்கூடாது எனவும் வேறு பயணமொன்றை மேற்கொள்ள தயாராகின்றீர்களா என தம்மிடம் கேட்டதாகவும் இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் செயற்படுவது மாத்திரமன்றி அது தொடர்பாக பேசக்கூட முடியாது எனில் மக்களின் நன்மைக்காக தனியானதொரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என தான் அன்று உறுதியாக தீர்மானித்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் செயற்படுகையில் கட்சி, நிறம், பதவி, உறவுகள் மற்றும் நட்பு என்ற எந்தவொரு விடயத்தையும் கருத்திற்கொள்ளாததுடன், இன்று நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது தமது சகோதரர்களுக்கும் அவ்விதமே நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை தான் செயலில் தற்போது காட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் திம்புலாகல பிரதேச சபைக்கு போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதேசத்தின் மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மத தலைவர்கள், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன, என்.பி.சமந்த உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதனிடையே பொலன்னறுவை கலஹகல ஸ்ரீதர்மராஜ விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு தொகுதி இன்று முற்பகல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.
“கருணை ஆட்சி – நிலையான நாடு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் ஆரோக்கியமான அளித்து, நோயற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சிறுநீரக நோய் நிவாரண தேசிய செயற்திட்டம் மற்றும் ஜப்பான் கூட்டமைப்பின் பிரதான நிறைவேற்றதிகாரி கலாநிதி மிட்சுகி சுகியின் அன்பளிப்பில் இந்த நீர் சுத்திகரிப்புத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
”எழுச்சி பெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் கலஹகல ஸ்ரீ தர்மராஜ விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய அறநெறி பாடசாலைக் கட்டிடமும் இதன்போது ஜனாதிபதியால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.விகாராதிபதி பொலன்னறுவை பிரதேச பிரதான சங்க நாயக்கர் குருவாஓயே தம்மசித்தி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரால் பிரித் பாராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு இதன்போது ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
அதன்பின்னர் பொலன்னறுவை திம்புலாகல பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்புக்கள் பலவற்றிலும் இன்று ஜனாதிபதி பங்குபற்றினார்.
முதலாவதாக திம்புலாகல, கல்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
அதன்பின்னர் யாய 08 அரச மரத்தருகே இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
ஜனாதிபதி, 1989 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், பொலன்னறுவை மக்களுக்காக மேற்கொண்ட முதலாவது அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாய 08 பாலத்தின் அருகே இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு பிரதேச மக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் யாய 05 ஸ்ரீ விசுத்தாராம விகாரைக்கு அருகே இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
அரலகங்வில மற்றும் விஜயபாபுர வட்டாரங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்பின்னர் அரலகங்வில, அரசமர சந்தியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தம்மால் ஆரம்பிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மிகுந்த வினைத்திறனுடனும் துரிதமாகவும் இடம்பெற்று வருவதாக வலியுறுத்தினார்.
ஊழல், மோசடி மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக செயற்பட்ட உலக தலைவர்களுடன் அந்நாட்டு மக்களும் இணைந்து கொண்டுள்ளதைப் போல தாமும் மக்களுடன் இணைந்து ஊழல், மோசடி மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லவுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன். ரணில் எதை விரும்புகின்றாரோ, அதையே சம்பந்தன் செய்வார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டு உள்ள இனப்பிரச்சனையை தீர்ப்பதுக்கு என்னுடன் பேச வாருங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பல முறை அழைப்பு விடுத்து இருந்தேன். அவர்களும் வருகின்றோம், வருகின்றோம் என கூறி இறுதிவரை வரவில்லை. எதிர்க்கட்சியாக உள்ளதென கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக செயற்படவில்லை. அரசின் பங்காளி கட்சியாகவே செயற்படுகின்றது” என தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டு உள்ள இனப்பிரச்சனையை தீர்ப்பதுக்கு என்னுடன் பேச வாருங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பல முறை அழைப்பு விடுத்து இருந்தேன். அவர்களும் வருகின்றோம், வருகின்றோம் என கூறி இறுதிவரை வரவில்லை. எதிர்க்கட்சியாக உள்ளதென கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக செயற்படவில்லை. அரசின் பங்காளி கட்சியாகவே செயற்படுகின்றது” என தெரிவித்தார்
பந்தயத்தின் மூலம், பணம் சம்பாதித்த எலிசபெத் மகாராணி
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் குதிரை பந்தயம் மூலம் இதுவரை 6 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் சம்பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1988 ஆம் ஆண்டிலிருந்து 2017 வரை அவருடைய மாட்சிமைக்கு கீழ் உள்ள குதிரைகள் 2815 பந்தயங்களில் பங்கேற்று 451 பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 6 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேல் பரிசி கிடைத்துள்ளது. அத்துடன் அதிக வெற்றிகள் பெற்ற குதிரைகளுக்கு சொந்தக்காரராக மகாராணி 11 ஆவது இடத்தில் உள்ளார்.
குதிரை பந்தயத்தை 1988 ஆம் ஆண்டே ஆரம்பித்திருந்தாலும் கடந்த 2016 ஆம் ஆண்டே குதிரை பந்தயத்தில் சிறப்பானதாக இருந்துள்ளது. ஏனெனில் 2016 ஆம் ஆண்டே பரிசாக அதிகளவு பணத்தை பெற்றுள்ளார்.
91 வயதாகியும் குதிரை பந்தயத்தில் இன்னமும் மகாராணிக்கு ஆர்வம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1988 ஆம் ஆண்டிலிருந்து 2017 வரை அவருடைய மாட்சிமைக்கு கீழ் உள்ள குதிரைகள் 2815 பந்தயங்களில் பங்கேற்று 451 பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 6 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேல் பரிசி கிடைத்துள்ளது. அத்துடன் அதிக வெற்றிகள் பெற்ற குதிரைகளுக்கு சொந்தக்காரராக மகாராணி 11 ஆவது இடத்தில் உள்ளார்.
குதிரை பந்தயத்தை 1988 ஆம் ஆண்டே ஆரம்பித்திருந்தாலும் கடந்த 2016 ஆம் ஆண்டே குதிரை பந்தயத்தில் சிறப்பானதாக இருந்துள்ளது. ஏனெனில் 2016 ஆம் ஆண்டே பரிசாக அதிகளவு பணத்தை பெற்றுள்ளார்.
91 வயதாகியும் குதிரை பந்தயத்தில் இன்னமும் மகாராணிக்கு ஆர்வம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு கிடைத்த முக்கிய இடம்
உலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு (New World Westyle="width:100%;height:100%;"h) நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்க பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 64,584 பில்லியன் டாலர் ஆகும். அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. அந்நாட்டின் பணக்காரர்கள் 24,803 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து வைத்திருப்பதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து 19,522 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துடன் ஜப்பான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
பிரிட்டன் 9,919 பில்லியன் டாலர்களுடன் 4-வது இடத்திலும், ஜெர்மனி 9,660 பில்லியன் டாலர்களுடன் 5-வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் தனி நபர்களிடம் உள்ள மொத்த சொத்து மதிப்பு 8,230 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. 2017-ம் ஆண்டு, இந்தியாவின் சொத்து மதிப்பு 25 சதவிகிதம் வளர்ச்சிக் கண்டுள்ளது. 2016-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 6,584 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஒரே ஆண்டில் 8,230 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவுக்கு அடுத்த இடத்தை பிரான்ஸ் பிடித்துள்ளது. அந்நாட்டின் சொத்து மதிப்பு 6,649 பில்லியன் டாலர்கள். அடுத்தடுத்த இடங்களை கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
இந்தியாவின் 67 சதவிகித சொத்துக்கள் ஒரு சதவிகித இந்தியர்கள் வசமே உள்ளது என முன்னர் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. அதையே இந்த ஆய்வும் கூறியிருக்கின்றது. 2007-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 3,165 பில்லியன் டாலர்களாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பணக்காரர்களின் சொத்து 160 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின் முடிவில் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்க பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 64,584 பில்லியன் டாலர் ஆகும். அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. அந்நாட்டின் பணக்காரர்கள் 24,803 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து வைத்திருப்பதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து 19,522 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துடன் ஜப்பான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
பிரிட்டன் 9,919 பில்லியன் டாலர்களுடன் 4-வது இடத்திலும், ஜெர்மனி 9,660 பில்லியன் டாலர்களுடன் 5-வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் தனி நபர்களிடம் உள்ள மொத்த சொத்து மதிப்பு 8,230 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. 2017-ம் ஆண்டு, இந்தியாவின் சொத்து மதிப்பு 25 சதவிகிதம் வளர்ச்சிக் கண்டுள்ளது. 2016-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 6,584 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஒரே ஆண்டில் 8,230 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவுக்கு அடுத்த இடத்தை பிரான்ஸ் பிடித்துள்ளது. அந்நாட்டின் சொத்து மதிப்பு 6,649 பில்லியன் டாலர்கள். அடுத்தடுத்த இடங்களை கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
இந்தியாவின் 67 சதவிகித சொத்துக்கள் ஒரு சதவிகித இந்தியர்கள் வசமே உள்ளது என முன்னர் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. அதையே இந்த ஆய்வும் கூறியிருக்கின்றது. 2007-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 3,165 பில்லியன் டாலர்களாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பணக்காரர்களின் சொத்து 160 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்களத் தலைவர்கள், குழம்பிய நிலையில் தமிழ் தலைவர்கள்!
ங்கள அரசியல் தலைவர்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவும் திடமாகவும் உள்ளானர். நாங்கள் எமக்குள் தெளிவு இன்றி நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் பற்றிய சிந்தனையின்றி காற்றினால் கொண்டு செல்லப்படும் கடதாசி போல் நடந்து வருகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
போருக்கு பின்னரான சூழலில் தமிழ் மக்கள் இருப்பதையும் இழந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் இந்த விடயம் தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியான மௌனத்தையே சாதிக்கிறார்கள் என மக்கள் மத்தியிலிருந்து எழும் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் கருத்து வெளியிடுகையில், ‘இப்பொழுதும் எம்முள் பலர் கேட்பது, ஏன் அரசாங்கத்துடன் சேர்ந்து பொருளாதார நன்மைகளைப் பெற பின்னிற்கின்றீர்கள் என்பதையே, இத்தருணத்தில் நான் உச்ச நீதிமன்றத்தில் கூறியதையே ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது, இது எப்படி இருக்கின்றது என்றால் நாம் கனிஷ்ட மாணவர்களாகக் கல்லூரியில் மாபிள்கள் விளையாடிக் கொண்டிருந்த போது எம் சிரேஷ்ட மாணவர்கள் வந்து அத்தனை மாபிள்களையும் அடித்துப்பறித்து தாம் கையகப்படுத்தி விடுவார்கள்.
நாங்கள் அழுது புலம்ப, ஆசிரியர்களுக்குத் தெரியவரப் போகின்றதென்று கையகப்படுத்திய 25 மாபிள்களை தாமே வைத்துக் கொண்டு 6 அல்லது 7 அல்லது 8 தருவதாகப் பேரம் பேசுவார்கள். நாம் பத்தைக் கேட்டால் உடனே தந்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் 15 ஐ தாம் எடுத்துச் சென்று விடுவார்கள். அதேபோல் பொருளாதார நன்மைகளைத் தந்து எம்மை ஆறுதல்ப்படுத்துவது எமது முக்கியமான உரிமைகளைத் தாம் வைத்திருப்பதற்கே. நாம் பொருளாதார விருத்திகளைத் தந்துவிட்டோம் என்று கூறி எமது வரலாற்றுப் பிறப்புரிமைகளை அவர்கள் கைவசம் வைத்திருப்பதற்கே.
ஆகவே முழுமையான ஒரு பரந்த சிந்தனையுடன் எங்களைச் சுற்றி நடப்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார நன்மைகள் முக்கியம் தான். ஆனால் அவற்றை நாம் எமது புலம்பெயர்ந்தோர் ஊடாகவும் பெறலாம். சர்வதேச உதவிகளுடாகவும் பெறலாம்.
அரசாங்கத்திடம் பிச்சைகேட்டு எடுத்தோமானால் சதா காலமும் பிச்சைக்காரர்களாகவே இருக்க வேண்டும். அரசாங்கம் தாமாகக் கொடுப்பது வேறு நாம் திருவோடு ஏந்தும் நிலை வேறு. அவர்களிடம் தஞ்சம் புகுந்தவுடன் நடப்பது என்ன? தமக்கு வேண்டியவற்றை அவர்கள் சாதித்துக் கொள்வார்கள். காணிகளைக் கேட்பர், அவர்கள் இங்கு வந்து தொழில் செய்யக் கேட்பர், இராணுவம் தொடர்ந்திருக்கக் கேட்பர், நாங்கள் அவர்களிடம் எடுத்திருப்பதால் முடியாது என்று கூறமுடியாது.மேலும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுடன் வருவர். வந்து ஜம்புகஸ்பட்டுணவைக் காட்டி இது எமது சிங்கள நாட்டின் ஒரு பகுதி, தமிழர்கள் இங்கு 10 ஆம் நூற்றாண்டில் வந்து எம்மைத் துரத்திவிட்டு இப்பொழுது இங்கு குடியிருந்து கொண்டு எம்மையே எதிர்க்கப்பார்க்கின்றார்கள் என்று கூறுவர். அப்பொழுது அதற்கு மறுப்புத் தெரிவிக்கக்கூடிய நிலையில் நாங்கள் இருக்க மாட்டோம். எமது தனித்துவத்தை இழந்து விட்டிருப்போம். பிச்சைபோட்டு வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேவலமான இனமாக சர்வதேசத்தால் அடையாளப்படுத்தப்படுவோம்.
இருப்பதை நாம் இழந்து வருவதற்குக் காரணம் எமது பாரம்பரியம், வரலாறு, எமது இலக்கியம், இன்றைய சுற்றுச் சூழல் எதனையுமே அறியாது அரசியல் நடத்துவதேயாகும். பலமுள்ளவன் தான் விட்டுக் கொடுக்க வேண்டும். பலமற்றவன் விட்டுக்கொடுத்தால் அது பேடித்தனம். பயந்து விட்டுக்கொடுப்பதாகவே இருக்கும்.
பலமுள்ளவன் உடனே உங்கள் பலமற்ற நிலையைப் புரிந்து கொள்வான். இப்போது எமது அரசாங்கங்கள் எமது பலமற்ற நிலையை நன்றாக அறிந்து கொண்டிருக்கின்றன. எம்மை வாங்கிவிட முடியும் என்று நினைக்கின்றன. நாமும் அதற்கேற்றவாறே நடந்து வருகின்றோம். நாங்கள் பலமுள்ளவர்களாக மாறினால் தான் எங்களிடமிருந்து பறிப்பதை மற்றவர்கள் நிறுத்துவார்கள்.
நாம் பலமுடையவர்களாக மாறுவது எப்படி? முதலில் நாங்கள் பிச்சை கேட்பதை நிறுத்த வேண்டும். அடுத்தது நாங்கள் உண்மையின் வழி நிற்கின்றோம் என்ற எண்ணம் எம்முள் பிறக்க வேண்டும். நாம் எம்மை நாமே ஆண்ட மக்கள். இன்று ஆங்கிலேயர் தயவால் அதிகாரங்களைத் தமதாக்கி எம்மைப் பெரும்பான்மையினர் ஆளப்பார்ப்பது எமது உண்மை நிலையை மறைப்பதாகும், கொச்சைப்படுத்துவதாகும்.
ஆகவே தமிழ் மக்கள் தமது உரித்துக்களைப் பெறப் போராடுவது நியாயமானது என்பதில் நாங்கள் அசைவற்ற நம்பிக்கை கொள்ள வேண்டும். நாம் சிங்கள மக்களின் உரித்துக்களைப் பறிக்கப் போராடவில்லை. அவர்கள் மீது எமக்கு எவ்விதக் கோபமோ குரோதமோ இல்லை. அவர்களின் அரசியல்வாதிகள் மீது எமக்குப் பரிதாபம் இருக்கின்றது. கேவலம் பதவிக்குவர இந்த அருமருந்தன்ன நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கி விட்டார்கள் என்ற மனவருத்தம் எமக்குண்டு.
எமது உரித்துக்களை அவர்கள்தான் கையகப்படுத்தியுள்ளார்கள் என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அடுத்து நாம் பலமற்றவர்கள் என்று நினைப்பதைக் கைவிட வேண்டும். நாம் பலமுடையவர்கள். உலகம் பூராகவும் எம்மவர்கள் சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை மறக்கக் கூடாது. உண்மையில் சிறுபான்மையினர் மனோநிலையில்த் தான் சிங்கள மக்கட் தலைவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதை நாம் எமது மனதில் பதிய வைக்க வேண்டும்.
நாங்கள் உண்மைக்குப் போராடுகின்றோம், எம் மக்கள் நன்மைக்குப் போராடுகின்றோம், நியாயத்திற்குப் போராடுகின்றோம் என்ற திட நம்பிக்கை வந்துவிட்டால் நாங்கள் பலமுள்ளவர்களாக மாறுவோம். அவ்வாறான சிந்தனையில் நாம் இல்லாதபடியால்த்தான் மற்றவர்கள் பெருந்தன்மையை நாங்கள் எதிர்பார்த்து நிற்க வேண்டியுள்ளது. அதன்போது இருப்பவற்றையும் நாம் இழந்து வருகின்றோம். நிலங்கள் பறி போகின்றன. அதிகாரங்கள் பறிபோகின்றன. தரவேண்டியவை தராமல் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
போருக்கு பின்னரான சூழலில் தமிழ் மக்கள் இருப்பதையும் இழந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் இந்த விடயம் தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியான மௌனத்தையே சாதிக்கிறார்கள் என மக்கள் மத்தியிலிருந்து எழும் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் கருத்து வெளியிடுகையில், ‘இப்பொழுதும் எம்முள் பலர் கேட்பது, ஏன் அரசாங்கத்துடன் சேர்ந்து பொருளாதார நன்மைகளைப் பெற பின்னிற்கின்றீர்கள் என்பதையே, இத்தருணத்தில் நான் உச்ச நீதிமன்றத்தில் கூறியதையே ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது, இது எப்படி இருக்கின்றது என்றால் நாம் கனிஷ்ட மாணவர்களாகக் கல்லூரியில் மாபிள்கள் விளையாடிக் கொண்டிருந்த போது எம் சிரேஷ்ட மாணவர்கள் வந்து அத்தனை மாபிள்களையும் அடித்துப்பறித்து தாம் கையகப்படுத்தி விடுவார்கள்.
நாங்கள் அழுது புலம்ப, ஆசிரியர்களுக்குத் தெரியவரப் போகின்றதென்று கையகப்படுத்திய 25 மாபிள்களை தாமே வைத்துக் கொண்டு 6 அல்லது 7 அல்லது 8 தருவதாகப் பேரம் பேசுவார்கள். நாம் பத்தைக் கேட்டால் உடனே தந்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் 15 ஐ தாம் எடுத்துச் சென்று விடுவார்கள். அதேபோல் பொருளாதார நன்மைகளைத் தந்து எம்மை ஆறுதல்ப்படுத்துவது எமது முக்கியமான உரிமைகளைத் தாம் வைத்திருப்பதற்கே. நாம் பொருளாதார விருத்திகளைத் தந்துவிட்டோம் என்று கூறி எமது வரலாற்றுப் பிறப்புரிமைகளை அவர்கள் கைவசம் வைத்திருப்பதற்கே.
ஆகவே முழுமையான ஒரு பரந்த சிந்தனையுடன் எங்களைச் சுற்றி நடப்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார நன்மைகள் முக்கியம் தான். ஆனால் அவற்றை நாம் எமது புலம்பெயர்ந்தோர் ஊடாகவும் பெறலாம். சர்வதேச உதவிகளுடாகவும் பெறலாம்.
அரசாங்கத்திடம் பிச்சைகேட்டு எடுத்தோமானால் சதா காலமும் பிச்சைக்காரர்களாகவே இருக்க வேண்டும். அரசாங்கம் தாமாகக் கொடுப்பது வேறு நாம் திருவோடு ஏந்தும் நிலை வேறு. அவர்களிடம் தஞ்சம் புகுந்தவுடன் நடப்பது என்ன? தமக்கு வேண்டியவற்றை அவர்கள் சாதித்துக் கொள்வார்கள். காணிகளைக் கேட்பர், அவர்கள் இங்கு வந்து தொழில் செய்யக் கேட்பர், இராணுவம் தொடர்ந்திருக்கக் கேட்பர், நாங்கள் அவர்களிடம் எடுத்திருப்பதால் முடியாது என்று கூறமுடியாது.மேலும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுடன் வருவர். வந்து ஜம்புகஸ்பட்டுணவைக் காட்டி இது எமது சிங்கள நாட்டின் ஒரு பகுதி, தமிழர்கள் இங்கு 10 ஆம் நூற்றாண்டில் வந்து எம்மைத் துரத்திவிட்டு இப்பொழுது இங்கு குடியிருந்து கொண்டு எம்மையே எதிர்க்கப்பார்க்கின்றார்கள் என்று கூறுவர். அப்பொழுது அதற்கு மறுப்புத் தெரிவிக்கக்கூடிய நிலையில் நாங்கள் இருக்க மாட்டோம். எமது தனித்துவத்தை இழந்து விட்டிருப்போம். பிச்சைபோட்டு வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேவலமான இனமாக சர்வதேசத்தால் அடையாளப்படுத்தப்படுவோம்.
இருப்பதை நாம் இழந்து வருவதற்குக் காரணம் எமது பாரம்பரியம், வரலாறு, எமது இலக்கியம், இன்றைய சுற்றுச் சூழல் எதனையுமே அறியாது அரசியல் நடத்துவதேயாகும். பலமுள்ளவன் தான் விட்டுக் கொடுக்க வேண்டும். பலமற்றவன் விட்டுக்கொடுத்தால் அது பேடித்தனம். பயந்து விட்டுக்கொடுப்பதாகவே இருக்கும்.
பலமுள்ளவன் உடனே உங்கள் பலமற்ற நிலையைப் புரிந்து கொள்வான். இப்போது எமது அரசாங்கங்கள் எமது பலமற்ற நிலையை நன்றாக அறிந்து கொண்டிருக்கின்றன. எம்மை வாங்கிவிட முடியும் என்று நினைக்கின்றன. நாமும் அதற்கேற்றவாறே நடந்து வருகின்றோம். நாங்கள் பலமுள்ளவர்களாக மாறினால் தான் எங்களிடமிருந்து பறிப்பதை மற்றவர்கள் நிறுத்துவார்கள்.
நாம் பலமுடையவர்களாக மாறுவது எப்படி? முதலில் நாங்கள் பிச்சை கேட்பதை நிறுத்த வேண்டும். அடுத்தது நாங்கள் உண்மையின் வழி நிற்கின்றோம் என்ற எண்ணம் எம்முள் பிறக்க வேண்டும். நாம் எம்மை நாமே ஆண்ட மக்கள். இன்று ஆங்கிலேயர் தயவால் அதிகாரங்களைத் தமதாக்கி எம்மைப் பெரும்பான்மையினர் ஆளப்பார்ப்பது எமது உண்மை நிலையை மறைப்பதாகும், கொச்சைப்படுத்துவதாகும்.
ஆகவே தமிழ் மக்கள் தமது உரித்துக்களைப் பெறப் போராடுவது நியாயமானது என்பதில் நாங்கள் அசைவற்ற நம்பிக்கை கொள்ள வேண்டும். நாம் சிங்கள மக்களின் உரித்துக்களைப் பறிக்கப் போராடவில்லை. அவர்கள் மீது எமக்கு எவ்விதக் கோபமோ குரோதமோ இல்லை. அவர்களின் அரசியல்வாதிகள் மீது எமக்குப் பரிதாபம் இருக்கின்றது. கேவலம் பதவிக்குவர இந்த அருமருந்தன்ன நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கி விட்டார்கள் என்ற மனவருத்தம் எமக்குண்டு.
எமது உரித்துக்களை அவர்கள்தான் கையகப்படுத்தியுள்ளார்கள் என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அடுத்து நாம் பலமற்றவர்கள் என்று நினைப்பதைக் கைவிட வேண்டும். நாம் பலமுடையவர்கள். உலகம் பூராகவும் எம்மவர்கள் சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை மறக்கக் கூடாது. உண்மையில் சிறுபான்மையினர் மனோநிலையில்த் தான் சிங்கள மக்கட் தலைவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதை நாம் எமது மனதில் பதிய வைக்க வேண்டும்.
நாங்கள் உண்மைக்குப் போராடுகின்றோம், எம் மக்கள் நன்மைக்குப் போராடுகின்றோம், நியாயத்திற்குப் போராடுகின்றோம் என்ற திட நம்பிக்கை வந்துவிட்டால் நாங்கள் பலமுள்ளவர்களாக மாறுவோம். அவ்வாறான சிந்தனையில் நாம் இல்லாதபடியால்த்தான் மற்றவர்கள் பெருந்தன்மையை நாங்கள் எதிர்பார்த்து நிற்க வேண்டியுள்ளது. அதன்போது இருப்பவற்றையும் நாம் இழந்து வருகின்றோம். நிலங்கள் பறி போகின்றன. அதிகாரங்கள் பறிபோகின்றன. தரவேண்டியவை தராமல் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
சிங்களக் குடியேற்றத்திற்கு முஸ்தீபு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்காக ஹிபுல் ஓயா என்னும் பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்கள், வயல் நிலங்கள் மற்றும் குளங்களை கபளீகரம் செய்து நடைமுறைப்படுத்தவும் மேலும் ஒரு தொகுதி சிங்கள மக்களை அங்கே குடியேற்றவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை
கிராமங்களில் மண்கிண்டி மலை, ஆமையன் குளம், முந்திரிகை குளம், சிலோன் தியேட்டர்ஸ் பண்ணை, கென்பண்ணை, வெடிவைத்தகல்லு, மயில் குளம் மற்றும் வவுனியா வடக்கின் சில கிராமங்கள் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த கிராமங்களாகும். இவை தற்போது சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
இப்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சொந்தமான சூரியனாறு, பெரியாறு போன்ற ஆறுகளை வழிமறித்து ஹிபுல் ஓயா என்னு ம் பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இத் திட்டத்திற்காக இராமன் குளம், கொட்டோடைக் குளம், வெள்ளான் குளம், ஒயாமடு குளம் ஆகிய குளங்கள் மூடப்படவுள்ளதுடன் இந்தக் குளங்களின் நீர்ப்பாசனத்தின் ஊடாக செய்கை பண்ணப்பட்ட பெருமளவு வயல் நிலங்களும் கபளீகரம் செய்யப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் பிரதான இலக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்கள் மற்றும் வவுனியா வடக்கு பகுதியின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலங்களையும் விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்து அங்கே குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் வி வசாயம் செய்வதற்கான நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஹிபுல் ஓயா திட்டத்தின் ஊடாக புதிதாக ஒரு தொகுதி சிங்கள மக்களை தமிழர் நிலங்களில் குடியேற்றுவதையும் இலக்காகக் கொண்டிருக்கின்றது.
இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள வடமாகாண சபையின் அமர்வில் விசேட பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்;
முல்லைத்தீவில் சூரியனாறு, பெரியாறு ஆகிய இரு ஆறுகளை மறித்து ஹிபுல் ஓயா என்ற பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. இராமன்குளம், கொட்டோடைக்குளம், வெள்ளான்குளம், ஒயாமடுக்குளம் ஆகிய குளங்கள் மற்றும் அந்தக் குளங்களின் கீழான நீர்ப்பாசனம் பெறும் விவசாய நிலங்களை மூடி மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதி பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளாகும்.
இந்தக் காணிகளுக்கான ஆவணங்களை மக்கள் வைத்திருக்கும் நிலையில், மயில்குளம் என்ற தமிழ் மக்களின் பூர்வீக கிராமத்தில் அங்கு குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காணி ஆவணங்களை வழங்கினார்.
அந்த மயில்குளம் கிராமத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களும் இனிமேல் குடியேற்றப்படும் சிங்கள மக்களும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்காவே இந்த நீர்ப்பாசனத் திட்டம் தொடங்கப்படுகின்றது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
மிக வேகமாக பரவிவரும் சிங்களக் குடியேற்றம் இந்தத் திட்டத்தின் ஊடாக மேலும் வலுப்பெற்று மிக குறுகிய காலத்தில் முல்லைத்தீவு மாவ ட்டம் சிங்கள மயமாக்கப்படும் அபாயம் உள்ளது.
1948 ஆம் ஆண்டு கல்லோயா திட்டத்தின் ஊடாக வட, கிழக்கு மாகாணங்கள் இணையும் பகுதியில் சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டது. அதனால் 1959 ஆம் ஆண்டு அம்பாறை சிங்களப் பிரதேசமும் 1977 ஆம் ஆண்டு சேருவில சிங்களப் பிரதேசமும் உருவாக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக பல சிங்களப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றன. இது நல்ல உதாரணம். இதேபோல் ஹிபுல் ஓயா திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் புதிய சிங்கள பிரதேசங்கள் உருவாக்கப்படும். இலங்கை அரசாங்கம் தமிழர் நிலங்களில் குடியேற்றப்பட்ட 3,336 குடும்பங்களைச் சேர்ந்த 11,189 பேரைக் கொண்ட சிங்கள மக்களுக்கு ஒரு மாதிரியாகவும் தமிழ் மக்களுக்கு வேறு மாதிரியாகவும் செயற்படுகிறது என்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை
கிராமங்களில் மண்கிண்டி மலை, ஆமையன் குளம், முந்திரிகை குளம், சிலோன் தியேட்டர்ஸ் பண்ணை, கென்பண்ணை, வெடிவைத்தகல்லு, மயில் குளம் மற்றும் வவுனியா வடக்கின் சில கிராமங்கள் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த கிராமங்களாகும். இவை தற்போது சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
இப்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சொந்தமான சூரியனாறு, பெரியாறு போன்ற ஆறுகளை வழிமறித்து ஹிபுல் ஓயா என்னு ம் பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இத் திட்டத்திற்காக இராமன் குளம், கொட்டோடைக் குளம், வெள்ளான் குளம், ஒயாமடு குளம் ஆகிய குளங்கள் மூடப்படவுள்ளதுடன் இந்தக் குளங்களின் நீர்ப்பாசனத்தின் ஊடாக செய்கை பண்ணப்பட்ட பெருமளவு வயல் நிலங்களும் கபளீகரம் செய்யப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் பிரதான இலக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்கள் மற்றும் வவுனியா வடக்கு பகுதியின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலங்களையும் விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்து அங்கே குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் வி வசாயம் செய்வதற்கான நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஹிபுல் ஓயா திட்டத்தின் ஊடாக புதிதாக ஒரு தொகுதி சிங்கள மக்களை தமிழர் நிலங்களில் குடியேற்றுவதையும் இலக்காகக் கொண்டிருக்கின்றது.
இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள வடமாகாண சபையின் அமர்வில் விசேட பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்;
முல்லைத்தீவில் சூரியனாறு, பெரியாறு ஆகிய இரு ஆறுகளை மறித்து ஹிபுல் ஓயா என்ற பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. இராமன்குளம், கொட்டோடைக்குளம், வெள்ளான்குளம், ஒயாமடுக்குளம் ஆகிய குளங்கள் மற்றும் அந்தக் குளங்களின் கீழான நீர்ப்பாசனம் பெறும் விவசாய நிலங்களை மூடி மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதி பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளாகும்.
இந்தக் காணிகளுக்கான ஆவணங்களை மக்கள் வைத்திருக்கும் நிலையில், மயில்குளம் என்ற தமிழ் மக்களின் பூர்வீக கிராமத்தில் அங்கு குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காணி ஆவணங்களை வழங்கினார்.
அந்த மயில்குளம் கிராமத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களும் இனிமேல் குடியேற்றப்படும் சிங்கள மக்களும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்காவே இந்த நீர்ப்பாசனத் திட்டம் தொடங்கப்படுகின்றது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
மிக வேகமாக பரவிவரும் சிங்களக் குடியேற்றம் இந்தத் திட்டத்தின் ஊடாக மேலும் வலுப்பெற்று மிக குறுகிய காலத்தில் முல்லைத்தீவு மாவ ட்டம் சிங்கள மயமாக்கப்படும் அபாயம் உள்ளது.
1948 ஆம் ஆண்டு கல்லோயா திட்டத்தின் ஊடாக வட, கிழக்கு மாகாணங்கள் இணையும் பகுதியில் சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டது. அதனால் 1959 ஆம் ஆண்டு அம்பாறை சிங்களப் பிரதேசமும் 1977 ஆம் ஆண்டு சேருவில சிங்களப் பிரதேசமும் உருவாக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக பல சிங்களப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றன. இது நல்ல உதாரணம். இதேபோல் ஹிபுல் ஓயா திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் புதிய சிங்கள பிரதேசங்கள் உருவாக்கப்படும். இலங்கை அரசாங்கம் தமிழர் நிலங்களில் குடியேற்றப்பட்ட 3,336 குடும்பங்களைச் சேர்ந்த 11,189 பேரைக் கொண்ட சிங்கள மக்களுக்கு ஒரு மாதிரியாகவும் தமிழ் மக்களுக்கு வேறு மாதிரியாகவும் செயற்படுகிறது என்றார்.
கள்ள சாமி நித்தியானந்தா முன் கை கட்டி நிற்க்கும் ரஜனி: இது தான் ஆண்மீக அரசியலா ?
நடிகரும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தற்போது இழந்து வருபவருமான, ரஜனிகாந். அரசியலுக்கு தான் வருவதாக அறிவித்தார். ஆனால் கட்சி பேர் என்ன? என்ன சின்னம் எதனையும் அறிவிக்காமல் அவர் பாணியில் இழுத்தடிப்பு செய்து வருகிறார். முதலி இவர் பேச்சைக் கேட்டு உட்சாகமடைந்த இவரது ரசிகர்கள். தற்போதும் பெரும் குழப்பத்தில் உள்ளார்கள்.
எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல, தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று தமிழக இன்ரர் நெட்டை மட்டுமல்ல. உலகளாவிய ரீதியில் பல சர்சைகளை கிளப்பியுள்ளது. தமிழக பரபரப்பு பத்திரிகையான நக்கீரன் வைத்த பொறியில் சிக்கி சின்னாபின்னமானார். சாமியார் நித்தியானந்தா. இவர் நடிகையோடு கட்டிலில் அலங்கோலமாக இருந்த காட்சிகளை, வீடியோவில் பதிவேற்றிய செய்தியாளர். அதனை வெளியிட்டு நித்தியானந்தாவின் குட்டை உடைத்தார்.தற்போது வெளியாகியுள்ள படத்தில், ரஜனி மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் நித்தியானந்தாவிடம் ஆசி பெறுவது போன்ற காட்சிகள் அடங்கியுள்ளது. இது தான் ரஜனி அறிவித்துள்ள ஆண் மீக அரசியலா என்று, பலர் கிண்டலடிக்கிறார்கள். இது எங்கே கொண்டு போய் விடும் என்று தெரியவில்லை
நன்றி
என்ன செய்யப் போகிறார் இலங்கை ஜனாதிபதி சிறிசேன?
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படுகின்ற கடுமையான விமர்சனங்கள் குறித்து கோபமடைந்திருக்கும் நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளிடையே கூர்மையடைந்து வருகின்ற முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
அமைச்சரவைக்கு தலைமை தாங்குகிற ஜனாதிபதி வெளியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களை ஆட்சேபித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்த முதல் சம்பவம் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.
அரை மணி நேரத்துக்கும் கூடுதலான நேரம் உரையாற்றிவிட்டு வெளியே சென்ற ஜனாதிபதியைப் பின்தொடர்ந்து வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இரு பிரதான கட்சிகளையும் சேர்ந்த மூத்த அமைச்சர்களும் அவரைச் சமாதானப்படுத்தி, அழைத்து வந்ததாகவும் அவர் அமைதியாக மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியதாகவும் அறியக்கூடியதாக இருந்ததுமுன்னதாக ஜனாதிபதி சிறிசேன தனது உரையில், மத்திய வங்கி பிணைமுறிகள் கொள்வனவில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆணைக்குழுவை தான் நியமித்தது, ஐக்கிய தேசிய கட்சியை மாசுபடுத்தவே என்று நினைப்பதனாலேயே அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னைத் தாக்குகிறார்கள் என்று கூறினார்.
தேநீர் குடிக்கவே வெளிநடப்பு செய்தாரா?
அடுத்தடுத்த நாட்களில் இந்தச் சம்பவம் குறித்து தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசிய ஜனாதிபதி சிறிசேன, தேநீர் குடிக்கவே அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளியே சென்றதாகக் கூறினர்.
அதன் பிறகு, அமைச்சரவையின் முடிவுகளை அறிவிப்பதற்காகக் கூட்டப்படுகின்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அரசாங்கப் பேச்சாளர்களில் ஒருவரான சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி கழிப்பறைக்குத்தான் சென்றார் என்று கூறியதையும் நாட்டு மக்களில் எவரும் நம்பியதாகக் கூறமுடியுமா? அவ்வாறு கழிப்பறைக்கு ஜனாதிபதி சென்றிருந்தால் அரைமணி நேரமாக அங்கே என்ன செய்தார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்தியாளர்கள் மத்தியில் கேள்வியெழுப்பி பகடிசெய்ததும் காணக்கூடியதாக இருந்தது.ஜனாதிபதி சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து வருடங்களே என்றும் அந்தப் பதவிக்காலம் 2020 ஜனவரி 9 ஆம் திகதி நிறைவுபெறுகிறது என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்து இரண்டு நாட்கள் கழித்து அவர் அமைச்சரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.
தனது பதவிக்காலம் குறித்து வேறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்படுவதால் குழப்பமான நிலையைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று கூறிய ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் அரசியலமைப்பு அடிப்படையிலான விளக்கத்தைக் கேட்டிருந்தார்.ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாகக் குறைக்கும் அரசியலமைப்புக்கான 19 வது திருத்தச் சட்டம் 2015 ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே, அதாவது 2015 ஜனவரி 8ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற சிறிசேன, மறுநாளே ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
அவர் தேர்தலில் போட்டியிட்டவேளையில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு ஏற்பாட்டின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களே. அதனால் மக்கள் அவரை 6 வருட பதவிக் காலத்துக்கே தெரிவு செய்தனர் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தனது வியாக்கியானத்தை முன்வைத்தார். ஆனால், அந்த வாதத்தை, ஐந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளும் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டனர். சட்டமா அதிபரின் வாதம் ஜனாதிபதி சிறிசேன 2021 ஜனவரி 9 வரை பதவியில் தொடரமுடியும் என்பதேயாகும்அமைச்சரவையில் தனது ஆவேச உரையில் பதிலளித்த ஜனாதிபதி, என்றென்றைக்கும் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்காக தான் பதவிக்கு வரவில்லை என்றும் எந்த நேரத்திலும் பதவியைத் தூக்கியெறிந்துவிட்டுப் போகத்தயாராயிருப்பதாகவும் குறிப்பிட்டார். உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.
நாகரிக அரசியல் கலாசாரம்?
இந்த நிகழ்வுப் போக்குகள் எல்லாமே இரு வருடங்களுக்குப் பிறகு ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் என்னவாயிருக்கும் என்ற கேள்வியை எழுப்பி நின்ற நிலையில் அவரோ கடந்த சனிக்கிழமை தலைநகர் கொழும்புக்கு வெளியே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் சகல ஊழல் மோசடிக்காரர்களையும் குற்றவாளிகளையும் நரகத்துக்கு அனுப்பிவைத்துவிட்டு, நாகரிகமான அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவித்த பிறகே ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்கப்போவதாகச் சூளுரைத்தார்.
ஜனாதிபதி சிறிசேனவின் இந்தப் பேச்சுக்கள் எல்லாம் அவர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்துவிட்டு 2015 ஜனவரி 9 மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்த உடன், அங்கிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது செய்த பிரகடனத்தை தவிர்க்க முடியாமல் நினைவுபடுத்துகின்றன.இன்னொரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அவர் அன்று கூறினார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதென்ற தனது தேர்தல் வாக்குறுதியை விரைவாக நிறைவேற்றுவதில் தனக்கு இருக்கும் உறுதிப்பாட்டையே அவர் அந்தப் பிரகடனத்தின் மூலமாக நேர்மையாக வெளிக்காட்டினார் என்றே பலரும் நம்பினார்கள்.
ஆனால், ஜனாதிபதி சிறிசேனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தங்களது வேட்பாளர் என்று சுதந்திர கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பல மாதங்களாக தொடர்ந்து கூறிவருகின்றபோது அவரோ சூட்சுமமான ஒரு மௌனத்தைச் சாதித்து வருகிறாரே தவிர, வெளிப்படையாக மறுக்கவில்லை. இது அவரது அரசியல் நேர்மையைக் கடுமையான சந்தேகத்துக்குள்ளாக்குகிறதுசில தினங்களுக்கு முன்னர்கூட நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன அரசியலமைப்பு மாற்றப்படாமல் தற்போதுள்ளவாறே தொடர்ந்து இருக்குமானால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையும் மாற்றப்படாமல் இருக்குமானால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன நிச்சயம் போட்டியிடுவார் என்று கூறினார்.
இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது, 2020 ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக சிறிசேன போட்டியிடுவாரா, இல்லையா என்பது தெளிவற்றதாக இருக்கிறது.
நாட்டு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை மதித்து, எஞ்சியிருக்கும் இரு வருட காலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலமாக ஒழிக்க அவரால் இயலுமா என்ற கேள்வியையும் கேட்கவேண்டியிருக்கிறது.மூன்று வருடங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றி மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாதிருக்கத் தீர்மானிப்பாரேயானால், ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்வி எழுகிறது.
வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தீர்மானிப்பாரேயானால், அவரின் அரசியல் நம்பகத்தன்மை அடிபட்டுப்போகும்.
அதேவேளை மீண்டும் தேர்தல் அரசியலில் பங்கேற்காதிருக்க சிறிசேன முடிவெடுத்தால் இன்னும் இருவருடங்களில் பதவியில் இருந்து இறங்கப்போகின்றார் என்பதை நன்கு தெரிந்துகொண்டபின்னர் சுதந்திர கட்சியைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக அதிகாரத்தையும் பதவிவழியான வரப்பிரசாதங்களையும் அனுபவிப்பதிலேயே எப்போதும் குறியாக இருக்கின்ற அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்வளவு காலத்துக்கு அவருக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
ராஜபக்சவுடன் நிற்கும் எம்.பி.க்கள்
சுதந்திர கட்சியின் உத்தியோகபூர்வ தலைவராக ஜனாதிபதி சிறிசேன இருக்கிறபோதிலும், தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பிரிவினருக்கே அவர் நடைமுறையில் தலைவராக இருக்கிறார். மற்றைய பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிரணி என்று செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50க்கும் அதிகமானவர்கள் ராஜபக்சவுடனேயே அணிசேர்ந்து நிற்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விடவும் கூடுதலானதாகும்.ராஜபக்சவுடன் நிற்பவர்கள் கட்சித் தலைமையின் எச்சரிக்கையையும் மீறி உள்ளூராட்சி தேர்தல்களில் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
சுதந்திர கட்சியின் தலைமையை மீண்டும் கைப்பற்ற முடியாமல் போகுமேயானால் தங்களது எதிர்கால அரசியல் வாகனமாக ராஜபக்ச சகோதர்களும் பிள்ளைகளும் இந்தப் புதிய கட்சியையே பயன்படுத்துவார்கள். தற்போதைக்கு அதன் பெயரளவிலான தலைவராக முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் 'அமர்த்தப்பட்டிருக்கிறார்'ஜனாதிபதி சிறிசேனவின் இடத்தில் சுதந்திர கட்சியின் தலைமைக்கு வருவதற்கு தேசிய ரதியில் ஏற்புடைய அரசியல்வாதியொருவர் இல்லாத நிலையில் அந்த கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தலைமைக்காக ராஜபக்ச சகோதரர்களை நோக்கியே ஓடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஜனாதிபதி சிறிசேன தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்பது உறுதியாகுமேயானால் இப்போது அவருடன் நிற்கும் அரசியல்வாதிகள் அவரைக் கைவிட்டு ஓடுவார்கள் என்பது நிச்சயம். ஏனென்றால், அவர்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தை உறுதிசெய்வதிலேயே அக்கறையாயிருப்பார்கள்.
அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியினரைப் பொறுத்தவரை அவர்கள் சுதந்திர கட்சியுடனான அரசியல் சக வாழ்வைத் தொடருவதில் இனிமேலும் அக்கறை காட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் அடுத்து மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகளும் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜனாதிபதியின் கட்சிக்கும் இடையிலான உறவு நிலையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று நம்பலாம்.
ஜனாதிபதியைக் கண்டனம் செய்து பேசவேண்டாம் என்று பிரதமர் விக்கிரமசிங்க இப்போது தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறுவதைப் போன்று முன்பு ஜனாதிபதியும் பிரதமரை விமர்சிக்கவேண்டாம் என்று சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இரு தலைவர்களுக்கும் இடையே சஞ்சலத்துடன் கூடிய ஒருவித புரிந்துணர்வு இருப்பதென்பது உண்மையென்றாலும் அடுத்து வரும் மாதங்களில் ஐக்கிய தேசிய கட்சியினர் தங்களது தலைவரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறவைப்பதற்கான வியூகங்களை வகுக்கவேண்டியிருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது சகவாழ்வு சீர்குலைவதற்கான வாய்ப்புக்களே அதிகம் என்று தோன்றுகிறது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டிடுவதென்பது பிரதமர் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை மிகவும் அவசியமானதாகும். அவரின் அரசியல் எதிர்காலம் அதில் தங்கியிருக்கிறது. மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நழுவ அவர் முயற்சிப்பாரேயானால் கட்சியில் தனது தலைமைத்துவத்தைக் காப்பாறுவதற்கு அவரால் இயலாமல் போகும்.
கடந்த மூன்று வருடங்களாக நாட்டின் பொருளாதார விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை ஐக்கிய தேசிய கட்சியிடம் ஒப்படைத்திருந்ததாகவும் இனிமேல் அந்த விவகாரத்தை தானே கையேற்கப் போவதாகவும் ஜனாதிபதி வார இறுதியில் கூறியிருந்தார். இது நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சியுடன் அவருக்கு பெரும் முரண்நிலையைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.
நாடாளுமன்றத்தை கலைக்க முடியாமை
முன்னைய ஜனாதிபதிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கொண்டிருந்த கட்சிகளுடன் முரண்பாடுகள் தீவிரமடைந்த சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய பொதுத் தேர்தலுக்கு உத்தரவிடுவதற்கு தங்களது அதிகாரங்களைப் பயன்படுத்தினர். முந்தைய அரசியலமைப்பு ரீதியான ஏற்பாட்டின்படி, ஒரு நாடாளுமன்றம் முதன் முதலாகக் கூடிய தினத்தில் இருந்து ஒரு வருடம் கடந்த பின்னர் அதைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது.ஆனால், அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்துக்குப் பிறகு அவ்வாறு செய்யமுடியாது என்றாகிவிட்டது. நாடாளுமன்றத்தின் ஐந்து வருட பதவிக் காலத்தில் நாலரை வருடங்கள் கடந்த பின்னரே நாடாளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்கமுடியும்.
சிறிசேனவின் தற்போதைய பதவிக்காலம் 2015 ஜனவரி 9 முடிவடையும்போது நாடாளுமன்றம் அதன் பவிக்காலத்தில் நாலரை வருடங்களுக்கும் குறைவான காலத்தையே பூர்த்திசெய்திருக்கும். அதனால், தனக்கு அரசியல் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் முடியாத பலவீனமான நிலையே அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
எனவே, தனது பதவிக்காலம் தொடர்பாக குழப்பநிலை இருப்பதாகக் கூறி உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தைக் கேட்கப்போய் இறுதியில் அரசியல் ரீதியில் தனது அதிகாரத்தை முனைப்புடன் செயற்படுத்த முடியாத ஒரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக (Lame duck president) சிறிசேன தன்னை ஆக்கிக்கொண்டுவிட்டாரோ என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது.
அவ்வாறான சூழ்நிலையைத் தவிர்க்க அல்லது தடுக்கக்கூடிய அளவுக்கு போதுமான அரசியல் நுண்மதியும் சூழ்ச்சித் திறனும் தன்னிடமிருக்கிறது என்று அவரால் நிரூபிக்கமுடியுமா?
அமைச்சரவைக்கு தலைமை தாங்குகிற ஜனாதிபதி வெளியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களை ஆட்சேபித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்த முதல் சம்பவம் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.
அரை மணி நேரத்துக்கும் கூடுதலான நேரம் உரையாற்றிவிட்டு வெளியே சென்ற ஜனாதிபதியைப் பின்தொடர்ந்து வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இரு பிரதான கட்சிகளையும் சேர்ந்த மூத்த அமைச்சர்களும் அவரைச் சமாதானப்படுத்தி, அழைத்து வந்ததாகவும் அவர் அமைதியாக மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியதாகவும் அறியக்கூடியதாக இருந்ததுமுன்னதாக ஜனாதிபதி சிறிசேன தனது உரையில், மத்திய வங்கி பிணைமுறிகள் கொள்வனவில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆணைக்குழுவை தான் நியமித்தது, ஐக்கிய தேசிய கட்சியை மாசுபடுத்தவே என்று நினைப்பதனாலேயே அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னைத் தாக்குகிறார்கள் என்று கூறினார்.
தேநீர் குடிக்கவே வெளிநடப்பு செய்தாரா?
அடுத்தடுத்த நாட்களில் இந்தச் சம்பவம் குறித்து தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசிய ஜனாதிபதி சிறிசேன, தேநீர் குடிக்கவே அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளியே சென்றதாகக் கூறினர்.
அதன் பிறகு, அமைச்சரவையின் முடிவுகளை அறிவிப்பதற்காகக் கூட்டப்படுகின்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அரசாங்கப் பேச்சாளர்களில் ஒருவரான சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி கழிப்பறைக்குத்தான் சென்றார் என்று கூறியதையும் நாட்டு மக்களில் எவரும் நம்பியதாகக் கூறமுடியுமா? அவ்வாறு கழிப்பறைக்கு ஜனாதிபதி சென்றிருந்தால் அரைமணி நேரமாக அங்கே என்ன செய்தார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்தியாளர்கள் மத்தியில் கேள்வியெழுப்பி பகடிசெய்ததும் காணக்கூடியதாக இருந்தது.ஜனாதிபதி சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து வருடங்களே என்றும் அந்தப் பதவிக்காலம் 2020 ஜனவரி 9 ஆம் திகதி நிறைவுபெறுகிறது என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்து இரண்டு நாட்கள் கழித்து அவர் அமைச்சரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.
தனது பதவிக்காலம் குறித்து வேறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்படுவதால் குழப்பமான நிலையைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று கூறிய ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் அரசியலமைப்பு அடிப்படையிலான விளக்கத்தைக் கேட்டிருந்தார்.ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாகக் குறைக்கும் அரசியலமைப்புக்கான 19 வது திருத்தச் சட்டம் 2015 ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே, அதாவது 2015 ஜனவரி 8ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற சிறிசேன, மறுநாளே ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
அவர் தேர்தலில் போட்டியிட்டவேளையில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு ஏற்பாட்டின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களே. அதனால் மக்கள் அவரை 6 வருட பதவிக் காலத்துக்கே தெரிவு செய்தனர் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தனது வியாக்கியானத்தை முன்வைத்தார். ஆனால், அந்த வாதத்தை, ஐந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளும் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டனர். சட்டமா அதிபரின் வாதம் ஜனாதிபதி சிறிசேன 2021 ஜனவரி 9 வரை பதவியில் தொடரமுடியும் என்பதேயாகும்அமைச்சரவையில் தனது ஆவேச உரையில் பதிலளித்த ஜனாதிபதி, என்றென்றைக்கும் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்காக தான் பதவிக்கு வரவில்லை என்றும் எந்த நேரத்திலும் பதவியைத் தூக்கியெறிந்துவிட்டுப் போகத்தயாராயிருப்பதாகவும் குறிப்பிட்டார். உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.
நாகரிக அரசியல் கலாசாரம்?
இந்த நிகழ்வுப் போக்குகள் எல்லாமே இரு வருடங்களுக்குப் பிறகு ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் என்னவாயிருக்கும் என்ற கேள்வியை எழுப்பி நின்ற நிலையில் அவரோ கடந்த சனிக்கிழமை தலைநகர் கொழும்புக்கு வெளியே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் சகல ஊழல் மோசடிக்காரர்களையும் குற்றவாளிகளையும் நரகத்துக்கு அனுப்பிவைத்துவிட்டு, நாகரிகமான அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவித்த பிறகே ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்கப்போவதாகச் சூளுரைத்தார்.
ஜனாதிபதி சிறிசேனவின் இந்தப் பேச்சுக்கள் எல்லாம் அவர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்துவிட்டு 2015 ஜனவரி 9 மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்த உடன், அங்கிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது செய்த பிரகடனத்தை தவிர்க்க முடியாமல் நினைவுபடுத்துகின்றன.இன்னொரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அவர் அன்று கூறினார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதென்ற தனது தேர்தல் வாக்குறுதியை விரைவாக நிறைவேற்றுவதில் தனக்கு இருக்கும் உறுதிப்பாட்டையே அவர் அந்தப் பிரகடனத்தின் மூலமாக நேர்மையாக வெளிக்காட்டினார் என்றே பலரும் நம்பினார்கள்.
ஆனால், ஜனாதிபதி சிறிசேனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தங்களது வேட்பாளர் என்று சுதந்திர கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பல மாதங்களாக தொடர்ந்து கூறிவருகின்றபோது அவரோ சூட்சுமமான ஒரு மௌனத்தைச் சாதித்து வருகிறாரே தவிர, வெளிப்படையாக மறுக்கவில்லை. இது அவரது அரசியல் நேர்மையைக் கடுமையான சந்தேகத்துக்குள்ளாக்குகிறதுசில தினங்களுக்கு முன்னர்கூட நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன அரசியலமைப்பு மாற்றப்படாமல் தற்போதுள்ளவாறே தொடர்ந்து இருக்குமானால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையும் மாற்றப்படாமல் இருக்குமானால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன நிச்சயம் போட்டியிடுவார் என்று கூறினார்.
இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது, 2020 ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக சிறிசேன போட்டியிடுவாரா, இல்லையா என்பது தெளிவற்றதாக இருக்கிறது.
நாட்டு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை மதித்து, எஞ்சியிருக்கும் இரு வருட காலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலமாக ஒழிக்க அவரால் இயலுமா என்ற கேள்வியையும் கேட்கவேண்டியிருக்கிறது.மூன்று வருடங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றி மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாதிருக்கத் தீர்மானிப்பாரேயானால், ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்வி எழுகிறது.
வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தீர்மானிப்பாரேயானால், அவரின் அரசியல் நம்பகத்தன்மை அடிபட்டுப்போகும்.
அதேவேளை மீண்டும் தேர்தல் அரசியலில் பங்கேற்காதிருக்க சிறிசேன முடிவெடுத்தால் இன்னும் இருவருடங்களில் பதவியில் இருந்து இறங்கப்போகின்றார் என்பதை நன்கு தெரிந்துகொண்டபின்னர் சுதந்திர கட்சியைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக அதிகாரத்தையும் பதவிவழியான வரப்பிரசாதங்களையும் அனுபவிப்பதிலேயே எப்போதும் குறியாக இருக்கின்ற அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்வளவு காலத்துக்கு அவருக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
ராஜபக்சவுடன் நிற்கும் எம்.பி.க்கள்
சுதந்திர கட்சியின் உத்தியோகபூர்வ தலைவராக ஜனாதிபதி சிறிசேன இருக்கிறபோதிலும், தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பிரிவினருக்கே அவர் நடைமுறையில் தலைவராக இருக்கிறார். மற்றைய பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிரணி என்று செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50க்கும் அதிகமானவர்கள் ராஜபக்சவுடனேயே அணிசேர்ந்து நிற்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விடவும் கூடுதலானதாகும்.ராஜபக்சவுடன் நிற்பவர்கள் கட்சித் தலைமையின் எச்சரிக்கையையும் மீறி உள்ளூராட்சி தேர்தல்களில் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
சுதந்திர கட்சியின் தலைமையை மீண்டும் கைப்பற்ற முடியாமல் போகுமேயானால் தங்களது எதிர்கால அரசியல் வாகனமாக ராஜபக்ச சகோதர்களும் பிள்ளைகளும் இந்தப் புதிய கட்சியையே பயன்படுத்துவார்கள். தற்போதைக்கு அதன் பெயரளவிலான தலைவராக முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் 'அமர்த்தப்பட்டிருக்கிறார்'ஜனாதிபதி சிறிசேனவின் இடத்தில் சுதந்திர கட்சியின் தலைமைக்கு வருவதற்கு தேசிய ரதியில் ஏற்புடைய அரசியல்வாதியொருவர் இல்லாத நிலையில் அந்த கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தலைமைக்காக ராஜபக்ச சகோதரர்களை நோக்கியே ஓடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஜனாதிபதி சிறிசேன தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்பது உறுதியாகுமேயானால் இப்போது அவருடன் நிற்கும் அரசியல்வாதிகள் அவரைக் கைவிட்டு ஓடுவார்கள் என்பது நிச்சயம். ஏனென்றால், அவர்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தை உறுதிசெய்வதிலேயே அக்கறையாயிருப்பார்கள்.
அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியினரைப் பொறுத்தவரை அவர்கள் சுதந்திர கட்சியுடனான அரசியல் சக வாழ்வைத் தொடருவதில் இனிமேலும் அக்கறை காட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் அடுத்து மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகளும் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜனாதிபதியின் கட்சிக்கும் இடையிலான உறவு நிலையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று நம்பலாம்.
ஜனாதிபதியைக் கண்டனம் செய்து பேசவேண்டாம் என்று பிரதமர் விக்கிரமசிங்க இப்போது தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறுவதைப் போன்று முன்பு ஜனாதிபதியும் பிரதமரை விமர்சிக்கவேண்டாம் என்று சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இரு தலைவர்களுக்கும் இடையே சஞ்சலத்துடன் கூடிய ஒருவித புரிந்துணர்வு இருப்பதென்பது உண்மையென்றாலும் அடுத்து வரும் மாதங்களில் ஐக்கிய தேசிய கட்சியினர் தங்களது தலைவரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறவைப்பதற்கான வியூகங்களை வகுக்கவேண்டியிருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது சகவாழ்வு சீர்குலைவதற்கான வாய்ப்புக்களே அதிகம் என்று தோன்றுகிறது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டிடுவதென்பது பிரதமர் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை மிகவும் அவசியமானதாகும். அவரின் அரசியல் எதிர்காலம் அதில் தங்கியிருக்கிறது. மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நழுவ அவர் முயற்சிப்பாரேயானால் கட்சியில் தனது தலைமைத்துவத்தைக் காப்பாறுவதற்கு அவரால் இயலாமல் போகும்.
கடந்த மூன்று வருடங்களாக நாட்டின் பொருளாதார விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை ஐக்கிய தேசிய கட்சியிடம் ஒப்படைத்திருந்ததாகவும் இனிமேல் அந்த விவகாரத்தை தானே கையேற்கப் போவதாகவும் ஜனாதிபதி வார இறுதியில் கூறியிருந்தார். இது நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சியுடன் அவருக்கு பெரும் முரண்நிலையைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.
நாடாளுமன்றத்தை கலைக்க முடியாமை
முன்னைய ஜனாதிபதிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கொண்டிருந்த கட்சிகளுடன் முரண்பாடுகள் தீவிரமடைந்த சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய பொதுத் தேர்தலுக்கு உத்தரவிடுவதற்கு தங்களது அதிகாரங்களைப் பயன்படுத்தினர். முந்தைய அரசியலமைப்பு ரீதியான ஏற்பாட்டின்படி, ஒரு நாடாளுமன்றம் முதன் முதலாகக் கூடிய தினத்தில் இருந்து ஒரு வருடம் கடந்த பின்னர் அதைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது.ஆனால், அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்துக்குப் பிறகு அவ்வாறு செய்யமுடியாது என்றாகிவிட்டது. நாடாளுமன்றத்தின் ஐந்து வருட பதவிக் காலத்தில் நாலரை வருடங்கள் கடந்த பின்னரே நாடாளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்கமுடியும்.
சிறிசேனவின் தற்போதைய பதவிக்காலம் 2015 ஜனவரி 9 முடிவடையும்போது நாடாளுமன்றம் அதன் பவிக்காலத்தில் நாலரை வருடங்களுக்கும் குறைவான காலத்தையே பூர்த்திசெய்திருக்கும். அதனால், தனக்கு அரசியல் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் முடியாத பலவீனமான நிலையே அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
எனவே, தனது பதவிக்காலம் தொடர்பாக குழப்பநிலை இருப்பதாகக் கூறி உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தைக் கேட்கப்போய் இறுதியில் அரசியல் ரீதியில் தனது அதிகாரத்தை முனைப்புடன் செயற்படுத்த முடியாத ஒரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக (Lame duck president) சிறிசேன தன்னை ஆக்கிக்கொண்டுவிட்டாரோ என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது.
அவ்வாறான சூழ்நிலையைத் தவிர்க்க அல்லது தடுக்கக்கூடிய அளவுக்கு போதுமான அரசியல் நுண்மதியும் சூழ்ச்சித் திறனும் தன்னிடமிருக்கிறது என்று அவரால் நிரூபிக்கமுடியுமா?
பாதுகாப்புத் துறையில், விரைவில் ரோபோக்களா.?
பாதுகாப்புத்துறையில் விரைவில் ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த இந்தியாவும், ஜப்பானும் முடிவு செய்துள்ளன. இதற்காக இருநாடுகளும் இணைந்து செயற்பட புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேயின் நெருங்கிய ஆலோசகரும், ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச் சருமான கென்டாரோ சோனோரா கூறுகையில், ஆளில்லா வாகனங்கள் மற்றும் ரோபோக்களை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து செயற்படவுள்ளன. இருநாட்டு பிரதமர்களும் இந்த திட்டத்தை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளதால், அணுசக்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் தொடங்கப்பட வுள்ளது. இம்மாத இறுதிக்குள் விரைவாக இதனை தொடங்க வேண்டும் என்பதே ஜப்பானின் விருப்பம் என்றார்.
இது தொடர்பாக ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேயின் நெருங்கிய ஆலோசகரும், ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச் சருமான கென்டாரோ சோனோரா கூறுகையில், ஆளில்லா வாகனங்கள் மற்றும் ரோபோக்களை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து செயற்படவுள்ளன. இருநாட்டு பிரதமர்களும் இந்த திட்டத்தை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளதால், அணுசக்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் தொடங்கப்பட வுள்ளது. இம்மாத இறுதிக்குள் விரைவாக இதனை தொடங்க வேண்டும் என்பதே ஜப்பானின் விருப்பம் என்றார்.
ஆன்டி இந்தியன்
ஒபாமா அதிபராகப் பதவியேற்ற இரண்டு முறையும் வெள்ளை மாளிகை முன்பு தரை தெரியாத அளவுக்கு மனிதர்களால் நிரம்பி வழிந்தது வெள்ளை மாளிகை வளாகம். ட்ரம்பின் பதவியேற்பில் கூட்டமே இல்லை. மேலும் நீங்கள் எங்கள் அதிபரே இல்லை என்ற பதாகைகளுடன் எதிப்பாளர்கள் அமெரிக்க வீதிகளில் வலம் வந்தனர். அமெரிக்காவின் கடற்கரைப் பகுதிகளில் ட்ரம்புக்குத் துளியும் செல்வாக்கு இல்லை. அங்குதான் அதிகம் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்பது ஜனநாயகக் கட்சியின் வாதம்.
ட்விட்டர் அதிபர்
அதிபராகப் பதவியேற்ற நாள்முதல் தனது சொந்த ட்விட்டர் பக்கத்திலிருந்து 2598 ட்விட்களை செய்துள்ளார். அதிபருக்கான அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து 1797 ட்விட்களை செய்துள்ளார். இதில் 672 ட்விட்கள் தனது சொந்தப் பக்கத்திலிருந்து ரீ-ட்விட் செய்யப்பட்டவை. ஒபாமா அதிபராக இருந்த காலகட்டத்தில் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து 18 மாதங்களில் 372 ட்விட்களைதான் செய்துள்ளார். ஆனால் ட்ரம்ப் ட்விட்டரிலேயே வாழ்கிறார் ஒருநாளைக்கு சராசரியாக 12 ட்விட்களை தட்டி விடுகிறார் ட்ரம்ப்.
தடையோ தடை
ட்ரம்ப் பதவியேற்று முதலில் கையெழுத்திட்டதே ஒபாமா கேர் ரத்து செய்யும் ஆணையில்தான். அதனை தொடர்ந்து சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழையத் தடை என்று அறிவித்தார். பின்னர் ஹ1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு வருபவர்களுக்கும் செக் வைத்தார். மெக்ஸிகோவிடம் சுவர் எழுப்பப் பணம் கேட்டது. வடகொரியாவை ஒற்றை பட்டனை அழுத்தி அழித்து விடுவேன் என மிரட்டுவது என வருடம் முழுவதும் அதிர்ச்சி மோடிலேயே வைத்திருந்தார்.
ட்ரம்ப்
மிரட்டிய சிலிக்கான் வேலி
அமெரிக்காவில் சட்ட விரோதமாகப் புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றுவேன். அமெரிக்கர் அல்லாத பிறநாட்டவரின் எண்ணிக்கையையும் குறைக்கும் அமெரிக்க ஃபர்ஸ்ட் திட்டத்துக்கு ட்ரம்ப் அச்சாரம் போட்டதும் சிலிக்கான் வேலி சிஇஓ-க்களின் எதிர்ப்பு முதல் வில்லனாக ட்ரம்புக்கு அமைந்தது. திறமையானவர்களை இழந்துவிடுவீர்கள் என கூகுள் சுந்தர் பிச்சை குரலுயர்த்தினார். என்னங்க சார் உங்க சட்டம், அமெரிக்கா புலம்பெயர்ந்தவர்களால் கட்டமைக்கப்பட்டது என மார்க் ஆங்க்ரி மோடை ஆக்டிவேட் செய்தார்.
ஆன்டி இந்தியன்
இந்தியாவுடன் நட்பு பாராட்டுவேன் என்று சத்தமாக முழங்கிய ட்ரம்புக்கு இந்தியர்கள் மீது வெறுப்பு அதிகமாகிவிட்டது. ஹச்1பி விசாவில் கிடுக்கிபிடி போட்ட ட்ரம்ப் இப்போது லட்சக்கணக்கில் இந்திய டெக்கிகளை வெளியேற்ற ப்ளான் போடுகிறார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்கர்களைப் பணியமர்த்த வலியுறுத்தும் திட்டமும் உள்ளதாம். இதனால் நிறுவனங்களுக்குச் செலவு அதிகமாகும் என விழி பிதுங்கியுள்ளனர் சிலிக்கான் வேலி சிஇஓ-க்கள். க்ரின்கார்டுக்கு காத்திருப்போரும் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்றால் 6 லட்சம் இந்தியர்கள் இந்தியா திரும்பும் சூழல் ஏற்படும் என்கின்றனர் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.பயமுறுத்தும் வார் ரூம்
அமெரிக்க அதிபருக்கு அன்றாடம் அமெரிக்கா குறித்த தகவல்களை வழங்க வெள்ளை மாளிகையில் வார் ரூம் என்ற அமைப்பு செயல்படுகிறது. காலை 9 மணிக்கும், மாலை 4 மணிக்கும் இந்த அமைப்பு அளிக்கும் அறிக்கையில் அமெரிக்காவின் ப்ளஸ், மைனஸ் இருக்கும். ஆனால் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு வார் ரூம் பாசிட்டிவ் செய்திகளை மட்டும்தான் தரவேண்டும் என்ற உத்தரவால் அமெரிக்கா புகழ் மட்டுமே வாசிக்கிறது. இது ஆபத்தானது என்ற அபயக்குரலும் எழத் தொடங்கிவிட்டது.
பொருளாதாரத்தில் சிக்ஸர்
2016ல் ஒபாமா அரசு இருந்த போது 1.5 சதவிகிதமாக இருந்த ஜிடிபி ட்ரம்பின் ஓராண்டு ஆட்சியில் 2.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2009 பொருளாதாரச் சரிவின் போது 10 சதவிதமாகவும், ட்ரம்ப் பதிவியேற்பதற்கு முன்பு 5 சதவிகிதமாகவும் இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் தற்போது 4.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ட்ரம்ப் அதிபராவதற்கு முன்பு நவம்பர் 9, 2016ல் 18589 புள்ளிகளாக இருந்த டவ் ஜோன்ஸ் பங்குச்சந்தை தற்போது 26,014 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. ட்ரம்ப் ஆட்சியில் பொருளாதாரம் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது என்பதில் மறுப்பதற்கு இடமில்லை.
ட்ரம்ப்
துப்பாக்கிச் சூடு
ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து நடந்த மோசமான தாக்குதல்கள் எண்ணிக்கை மொத்தம் ஐந்து. அதில் உயிரிழந்தோர் மட்டும் 145 பேர். ஒரு ஆண்டில் அமெரிக்காவின் 127 நகரங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரம் என்பதை தாண்டி அரசு துப்பாக்கி சந்தையைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம். அமெரிக்காவில் உள்ள அரசியல் லாபி தான். குறிப்பாக குடியரசு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் பலருக்கு தேசிய ரைபிள் அசோசியேஷன் மற்றும் அமெரிக்க துப்பாக்கி உரிமையாளர்கள் சங்கம் லாபி செய்கிறது. மொத்தமாக உள்ள 435 அமெரிக்க பிரதிநிதிகளில் 232 பேரை இந்தச் சங்கங்கள் லாபி செய்கின்றன. இதனை மறைக்க ட்ரம்ப் மக்களின் மனநிலையில் பிரச்னை என்று கூறியதும் சர்ச்சைக்குள்ளானது.
அவமானப்படுத்திய மேடைகள்
சென்ற வருட ஆஸ்கர் மேடையில் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெலின் லைவ் ட்விட்டில் ட்ரம்ப்பை சாடியது, 2017 கோல்டன் க்ளோப் விருதில் மெரில் ஸ்ட்ரீப்பின் ட்ரம்ப்புக்கு எதிரான மிக நீண்ட உரை, 2018 கோல்டன் க்ளோப் விருது மேடையில் ட்ரம்பை நக்கலாக கலாய்த்த செத் மேயர்ஸ் என விருது மேடைகள் ட்ரம்புக்கு எதிராகவே அமைந்தன.
குடும்ப அரசியல்
அதிபர் ட்ரம்பின் ஆலோசகராக அவரது மகள் இவான்கா நியமிக்கப்பட்டுள்ளார். இவான்காவின் கணவர் ஜெராடும் அதிபர் ஆலோசகர்தான். அரசாங்கத்தின் முக்கியப் பதவிகளில் இன்னும் சில முக்கிய உறவினர்களைப் பணியமர்த்தியிருக்கிறார் ட்ரம்ப். அதிபர் தேர்தலின் போது பிரசார அதிகாரியாக இருந்த டேவிட் பூன் அமெரிக்க அதிபருக்கும் ரஷ்யாவுக்கு நடந்த பேச்சுவார்த்தைகள், தேர்தல் விதிமீறல்கள் எனப் பல விஷயங்களை முன் வைத்தார். மேலும் ட்ரம்பின் மகள் இவான்காவுக்கு அதிபர் ஆகும் ஆசை இருந்தது, ட்ரம்பின் மகனும், மருமகனும் ரஷ்ய வல்லுநர்களோடு ட்ரம்ப் டவரில் பேசிய விஷயங்கள் அமெரிக்காவுக்குத் தீங்கு விளைவிப்பவை என்று கூறினார். இதற்கு டேவிட் பூன் மனநிலை தவறிவிட்டார் என்கிறார் ட்ரம்ப்.
மொத்தத்தில் ஓராண்டில் நிறைய வைரல் நிகழ்வுகளை நிகழ்த்திய ட்ரம்ப் ஆக்கபூர்வமான எதையும் செய்யவில்லை. மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன் என்றவர் ஒரு செங்கலை கூட வைக்கவில்லை. அமெரிக்கர்களுக்கு நல்லது செய்வேன் என்று சொல்பவரை அமெரிக்கா வெளிப்படையாக எதிர்க்கிறது. இது முதல் வருடம் அதற்குள் இம்பீச்மென்ட் குறித்தெல்லாம் பேச்சு எழுகிறது.
2020ன் அமெரிக்க அதிபருக்கான அரியணையை ட்ரம்ப் தக்க வைப்பாரா என்ற கேள்விக்கு இந்த வருட பதில் இல்லை என்பதுதான். ஓப்ரா வின்ஃப்ரேவும், மார்க் சக்கர்பெர்க்கும், மிச்செல் ஒபாமாவும்தான் அமெரிக்காவும் 2020 களத்தில் இருக்கிறார்கள். மிஸ்டர் ட்ரம்ப் நீங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரி அல்ல, அமெரிக்க அதிபர் அந்த மனநிலைக்கு மாறி மீதமுள்ள நாள்களில் செயல்பட்டால் மேக் ட்ரம்ப் க்ரேட் எகெய்ன் சாத்தியம். இல்லையெனில் மீண்டும் குத்துச்சண்டை மைதானங்களில் வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கும்.
ட்விட்டர் அதிபர்
அதிபராகப் பதவியேற்ற நாள்முதல் தனது சொந்த ட்விட்டர் பக்கத்திலிருந்து 2598 ட்விட்களை செய்துள்ளார். அதிபருக்கான அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து 1797 ட்விட்களை செய்துள்ளார். இதில் 672 ட்விட்கள் தனது சொந்தப் பக்கத்திலிருந்து ரீ-ட்விட் செய்யப்பட்டவை. ஒபாமா அதிபராக இருந்த காலகட்டத்தில் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து 18 மாதங்களில் 372 ட்விட்களைதான் செய்துள்ளார். ஆனால் ட்ரம்ப் ட்விட்டரிலேயே வாழ்கிறார் ஒருநாளைக்கு சராசரியாக 12 ட்விட்களை தட்டி விடுகிறார் ட்ரம்ப்.
தடையோ தடை
ட்ரம்ப் பதவியேற்று முதலில் கையெழுத்திட்டதே ஒபாமா கேர் ரத்து செய்யும் ஆணையில்தான். அதனை தொடர்ந்து சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழையத் தடை என்று அறிவித்தார். பின்னர் ஹ1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு வருபவர்களுக்கும் செக் வைத்தார். மெக்ஸிகோவிடம் சுவர் எழுப்பப் பணம் கேட்டது. வடகொரியாவை ஒற்றை பட்டனை அழுத்தி அழித்து விடுவேன் என மிரட்டுவது என வருடம் முழுவதும் அதிர்ச்சி மோடிலேயே வைத்திருந்தார்.
ட்ரம்ப்
மிரட்டிய சிலிக்கான் வேலி
அமெரிக்காவில் சட்ட விரோதமாகப் புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றுவேன். அமெரிக்கர் அல்லாத பிறநாட்டவரின் எண்ணிக்கையையும் குறைக்கும் அமெரிக்க ஃபர்ஸ்ட் திட்டத்துக்கு ட்ரம்ப் அச்சாரம் போட்டதும் சிலிக்கான் வேலி சிஇஓ-க்களின் எதிர்ப்பு முதல் வில்லனாக ட்ரம்புக்கு அமைந்தது. திறமையானவர்களை இழந்துவிடுவீர்கள் என கூகுள் சுந்தர் பிச்சை குரலுயர்த்தினார். என்னங்க சார் உங்க சட்டம், அமெரிக்கா புலம்பெயர்ந்தவர்களால் கட்டமைக்கப்பட்டது என மார்க் ஆங்க்ரி மோடை ஆக்டிவேட் செய்தார்.
ஆன்டி இந்தியன்
இந்தியாவுடன் நட்பு பாராட்டுவேன் என்று சத்தமாக முழங்கிய ட்ரம்புக்கு இந்தியர்கள் மீது வெறுப்பு அதிகமாகிவிட்டது. ஹச்1பி விசாவில் கிடுக்கிபிடி போட்ட ட்ரம்ப் இப்போது லட்சக்கணக்கில் இந்திய டெக்கிகளை வெளியேற்ற ப்ளான் போடுகிறார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்கர்களைப் பணியமர்த்த வலியுறுத்தும் திட்டமும் உள்ளதாம். இதனால் நிறுவனங்களுக்குச் செலவு அதிகமாகும் என விழி பிதுங்கியுள்ளனர் சிலிக்கான் வேலி சிஇஓ-க்கள். க்ரின்கார்டுக்கு காத்திருப்போரும் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்றால் 6 லட்சம் இந்தியர்கள் இந்தியா திரும்பும் சூழல் ஏற்படும் என்கின்றனர் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.பயமுறுத்தும் வார் ரூம்
அமெரிக்க அதிபருக்கு அன்றாடம் அமெரிக்கா குறித்த தகவல்களை வழங்க வெள்ளை மாளிகையில் வார் ரூம் என்ற அமைப்பு செயல்படுகிறது. காலை 9 மணிக்கும், மாலை 4 மணிக்கும் இந்த அமைப்பு அளிக்கும் அறிக்கையில் அமெரிக்காவின் ப்ளஸ், மைனஸ் இருக்கும். ஆனால் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு வார் ரூம் பாசிட்டிவ் செய்திகளை மட்டும்தான் தரவேண்டும் என்ற உத்தரவால் அமெரிக்கா புகழ் மட்டுமே வாசிக்கிறது. இது ஆபத்தானது என்ற அபயக்குரலும் எழத் தொடங்கிவிட்டது.
பொருளாதாரத்தில் சிக்ஸர்
2016ல் ஒபாமா அரசு இருந்த போது 1.5 சதவிகிதமாக இருந்த ஜிடிபி ட்ரம்பின் ஓராண்டு ஆட்சியில் 2.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2009 பொருளாதாரச் சரிவின் போது 10 சதவிதமாகவும், ட்ரம்ப் பதிவியேற்பதற்கு முன்பு 5 சதவிகிதமாகவும் இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் தற்போது 4.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ட்ரம்ப் அதிபராவதற்கு முன்பு நவம்பர் 9, 2016ல் 18589 புள்ளிகளாக இருந்த டவ் ஜோன்ஸ் பங்குச்சந்தை தற்போது 26,014 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. ட்ரம்ப் ஆட்சியில் பொருளாதாரம் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது என்பதில் மறுப்பதற்கு இடமில்லை.
ட்ரம்ப்
துப்பாக்கிச் சூடு
ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து நடந்த மோசமான தாக்குதல்கள் எண்ணிக்கை மொத்தம் ஐந்து. அதில் உயிரிழந்தோர் மட்டும் 145 பேர். ஒரு ஆண்டில் அமெரிக்காவின் 127 நகரங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரம் என்பதை தாண்டி அரசு துப்பாக்கி சந்தையைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம். அமெரிக்காவில் உள்ள அரசியல் லாபி தான். குறிப்பாக குடியரசு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் பலருக்கு தேசிய ரைபிள் அசோசியேஷன் மற்றும் அமெரிக்க துப்பாக்கி உரிமையாளர்கள் சங்கம் லாபி செய்கிறது. மொத்தமாக உள்ள 435 அமெரிக்க பிரதிநிதிகளில் 232 பேரை இந்தச் சங்கங்கள் லாபி செய்கின்றன. இதனை மறைக்க ட்ரம்ப் மக்களின் மனநிலையில் பிரச்னை என்று கூறியதும் சர்ச்சைக்குள்ளானது.
அவமானப்படுத்திய மேடைகள்
சென்ற வருட ஆஸ்கர் மேடையில் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெலின் லைவ் ட்விட்டில் ட்ரம்ப்பை சாடியது, 2017 கோல்டன் க்ளோப் விருதில் மெரில் ஸ்ட்ரீப்பின் ட்ரம்ப்புக்கு எதிரான மிக நீண்ட உரை, 2018 கோல்டன் க்ளோப் விருது மேடையில் ட்ரம்பை நக்கலாக கலாய்த்த செத் மேயர்ஸ் என விருது மேடைகள் ட்ரம்புக்கு எதிராகவே அமைந்தன.
குடும்ப அரசியல்
அதிபர் ட்ரம்பின் ஆலோசகராக அவரது மகள் இவான்கா நியமிக்கப்பட்டுள்ளார். இவான்காவின் கணவர் ஜெராடும் அதிபர் ஆலோசகர்தான். அரசாங்கத்தின் முக்கியப் பதவிகளில் இன்னும் சில முக்கிய உறவினர்களைப் பணியமர்த்தியிருக்கிறார் ட்ரம்ப். அதிபர் தேர்தலின் போது பிரசார அதிகாரியாக இருந்த டேவிட் பூன் அமெரிக்க அதிபருக்கும் ரஷ்யாவுக்கு நடந்த பேச்சுவார்த்தைகள், தேர்தல் விதிமீறல்கள் எனப் பல விஷயங்களை முன் வைத்தார். மேலும் ட்ரம்பின் மகள் இவான்காவுக்கு அதிபர் ஆகும் ஆசை இருந்தது, ட்ரம்பின் மகனும், மருமகனும் ரஷ்ய வல்லுநர்களோடு ட்ரம்ப் டவரில் பேசிய விஷயங்கள் அமெரிக்காவுக்குத் தீங்கு விளைவிப்பவை என்று கூறினார். இதற்கு டேவிட் பூன் மனநிலை தவறிவிட்டார் என்கிறார் ட்ரம்ப்.
மொத்தத்தில் ஓராண்டில் நிறைய வைரல் நிகழ்வுகளை நிகழ்த்திய ட்ரம்ப் ஆக்கபூர்வமான எதையும் செய்யவில்லை. மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன் என்றவர் ஒரு செங்கலை கூட வைக்கவில்லை. அமெரிக்கர்களுக்கு நல்லது செய்வேன் என்று சொல்பவரை அமெரிக்கா வெளிப்படையாக எதிர்க்கிறது. இது முதல் வருடம் அதற்குள் இம்பீச்மென்ட் குறித்தெல்லாம் பேச்சு எழுகிறது.
2020ன் அமெரிக்க அதிபருக்கான அரியணையை ட்ரம்ப் தக்க வைப்பாரா என்ற கேள்விக்கு இந்த வருட பதில் இல்லை என்பதுதான். ஓப்ரா வின்ஃப்ரேவும், மார்க் சக்கர்பெர்க்கும், மிச்செல் ஒபாமாவும்தான் அமெரிக்காவும் 2020 களத்தில் இருக்கிறார்கள். மிஸ்டர் ட்ரம்ப் நீங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரி அல்ல, அமெரிக்க அதிபர் அந்த மனநிலைக்கு மாறி மீதமுள்ள நாள்களில் செயல்பட்டால் மேக் ட்ரம்ப் க்ரேட் எகெய்ன் சாத்தியம். இல்லையெனில் மீண்டும் குத்துச்சண்டை மைதானங்களில் வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கும்.
மத்திய அரசுடன் மோதமுடியும்! – முதலமைச்சர்
நாங்கள் இராணுவத்தை ஒட்டுமொத்தமாகக் குறை கூறவில்லை. அதில் கடமையாற்றிய காவாலிகள் சிலரை அடையாளப்படுத்த வேண்டும் என்றே கேட்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் “இடைக்கால அறிக்கை – மாயைகளை கட்டுடைத்தல்” என்னும் தலைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சர்வதேச சட்டம் பலவழிகளிலும் விரிவடைந்து வருகின்றது என்பதை அவதானிப்போம். சர்வதேச சட்டம் என்றாலேயே பாரம்பரியமாகவோ, உடன்பாடுகள் மூலமாகவோ ஒன்று சேர்ந்த ஒரு தொகை விதிகளையே அடிப்படையில் அதுகுறிப்பிடும். இந்த விதிகளைக் கொண்டு நாடுகள் தம்மிடையேயான உறவுகளை வளர்க்கும் போது விதிகள் சட்ட அந்தஸ்து பெறுகின்றன. அண்மைக் காலங்களில் பல முக்கிய மாற்றங்கள் சர்வதேசச் சட்டத்தில் ஏற்பட்டுள்ளன. பலநாடுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள், அவற்றினால் உலக மக்கள் மனதில் ஏற்பட்ட தாக்கங்கள் போன்றவை இந்த மாற்றத்திற்குக் காரணம் ஆகிவிட்டன.
1983ம் ஆண்டு ஜுலை மாதத்தில் எமது அப்போதைய பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன் அவர்கள் மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்தார். அம் மாதம் 23ஆம் திகதிக்கு பின் வந்த நாட்களில் இலங்கையில் நடைபெற்ற கொடூரமான நிகழ்வுகள் தொலைக்காட்சி ஊடக ஒளிபரப்பப்பட்டு வந்தன. அதுபற்றி அவர் பின்னர் என்னிடம் கூறியபோது “எமது நாடு அந்தக் காலகட்டத்தில் நாறியது” என்றார். “வெட்கப்படுகின்றேன்” என்றார்.
அவ்வாறு நாடுகளில் நடந்தவற்றைப் பார்த்த சட்ட வல்லுநர்கள் பலர், சர்வதேச ச்சட்டத்தை விரிவாக்க வேண்டும் என்று எண்ணிய காரணத்தாலேயே சர்வதேசச் சட்டம் இப்போது விரிவடைந்த நிலையில் உள்ளது. இதன் பிரதிபலிப்பே உலகக் குற்றவியல் நீதிமன்ற ஏற்பாடு. அதுமட்டுமல்ல நிலைமாற்றத்தின் போது பாதிப்புக்குள்ளான நாடுகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி இப்பொழுதுவலுவான கருத்துக்கள் தோன்றியுள்ளன. நிலைமாற்றம் என்றால் என்ன? ஒருநாட்டின் அரசியல் நிலையில், யதார்த்தநிலையில் மாற்றம் ஏற்படுவதையே அதுகுறிக்கின்றது. ஒரு இருண்ட காலத்தினுள் இருந்து வெளிச்சத்தை நோக்கி எட்டிப்பார்ப்பதையே நிலைமாற்றம் குறிக்கின்றது.
எனவே நிலைமாறும் நாடுகள் நீதிக்குகந்ததாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளே நிலைமாற்ற நீதிமுறைகள் ஆவன. இதையே Transitional Justice என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். கஷ்ட நிலையில் இருந்து ஒருநாடு மீண்டுவரும் போது என்னென்ன நடவடிக்கைகளை நீதிக்குகந்ததாக அந்நாட்டில் எடுக்கவேண்டும் என்று சர்வதேச சட்டம் எதிர்பார்க்கின்றதோ அவற்றையே நிலைமாற்ற நீதிமுறைகள் என்று குறிப்பிடுகின்றது சர்வதேசச்சட்டம்.யாரோ அடக்கி ஆளப்பட்டதால்த்தான் அந்நாட்டில் வன்முறை வெடித்திருக்க வேண்டும் அல்லது கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிலைமாற்ற நீதிமுறைகள் இரண்டு முக்கிய எதிர்பார்ப்புக்களை முன்னிறுத்தியுள்ளன.ஒன்று அதிகாரப் பரவலாக்கம் மற்றது போர்க் குற்றவாளிகளைத் தண்டித்தல். இவற்றைச் சர்வதேசச் சமூகம் இலங்கையிலும் எதிர்பார்க்கின்றது. போர் முடிவுக்கு 2009ல் வந்திருப்பினும் இனப்பிரச்சனை அதனால்த் தீர்க்கப்படவில்லை.
அதனால்த்தான் அதிகாரப் பரவலாக்கம் தேவையுடையதாகின்றது. தற்போதும் 13வது திருத்தச்சட்டம் அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்தியேயுள்ளது. ஆனால் அது பெரும்பான்மையினரின் பெருந்தயவை முன்வைத்தேயாக்கப்பட்டுள்ளது.அதனால் தான் 1992இன் 58வது இலக்கச் சட்டமான மாவட்ட செயலாளர்கள் பற்றிய அதிகாரமாற்றச் சட்டத்தை இயற்றக் கூடியதாக இருந்தது. ஒற்றையாட்சி எனும் போது முன்னர் கொடுத்த அதிகாரங்களைப் பறித்து இவ்வாறான சட்டங்களைக் கொண்டுவரலாம்.
காரணம் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரம் பெரும்பான்மையினரின் கைவசமே தொடர்ந்திருக்கும். மாகாணசபைகளின் அதிகாரத்தின் கீழிருந்த மாவட்டச் செயலர்கள் திடீரென்று இந்தச் சட்டம் இயற்றப்பட்டதும் மத்திக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். இதனால் இன்று வடமாகாணத்தில் இரட்டை நிர்வாகம் நடைபெற்று வருகின்றது. ஒன்று மக்களால்த் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண உறுப்பினர்களின் நிர்வாகம். மற்றையது மத்திய அரசாங்கத்தின் முகவர்களின் நிர்வாகம்.
இங்கு இரு முகவர்கள் சேர்ந்தும் சேராமலும் அவர்கள் நிர்வாகத்தை நடத்தி வருகின்றார்கள். ஆளுநரும் மத்தியின் முகவர். அரசாங்க அதிபரும் அவர்களின் முகவரே. ஆகவே அதிகாரப் பரவலாக்கம் என்ற போது நாம் எதிர்பார்த்தது நம்மை நாமே ஆண்டு வருவதையே. ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் என்ற போர்வையில் எமக்குக் கிடைத்தது வேண்டியபோது மத்தியின் ஊடுறுவல்களே. இவ்வாறு ஊடுறுவல்கள் தொடர்ந்து இருந்தால் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படப் போகின்றவர்கள் போருக்கு முன்னர் பாதிக்கப்பட்ட அதேமக்களே. இதனால்த்தான் ஒற்றையாட்சியைக் களைந்து சமஷ்டி ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுவருகின்றோம்.
இடைக்காலவரைவுகள் ஒற்றையாட்சியினையே மையமாகக் கொண்டு வரையப்பட்டதால்த்தான் சர்வதேச நாடுகள் போதிய அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இப்பொழுது இன்றைய பேச்சாளர்களின் பேச்சுக்களின் கருப்பொருட்களின் ஒன்றுக்கொன்றான தொடர்பானது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். சர்வதேசச் சட்டம் எதிர்பார்ப்பதைத்தான் ஐக்கிய நாடுகள் கூறியுள்ளன.
ஆர்ஜென்டீனா சர்வாதிகாரத்தில் இருந்து வெளிவந்த போது யுகோஸ்லாவியா, றுவண்டா மற்றும் கம்போடியா போன்ற நாடுகளின் உள்நாட்டுப் போர்களில் இருந்து அவைவிடுபட்ட போது நிலைமாற்ற நீதிமுறைகள் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகள் தடைகளை விதித்தன.உலகக் குற்றவியல் மன்றத்தை உருவாக்குவதில் ஐக்கிய நாடுகள் கரிசனைகாட்டின. ஆகவே சர்வதேசச் சட்டம் நிலைமைக்கேற்றவாறு, சூழலுக்கேற்றவாறுமாறுதல் அடைந்து வந்துள்ளது.
எனவேதான் சர்வதேசச் சட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் நிலைமாற்ற நீதிமுறைகள் என்று எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலும் போர்க்குற்ற விசாரணையும் எமக்கு முக்கியமாகியுள்ளன. இரண்டையுந் தட்டிக்கழிக்கவே இலங்கை அரசாங்கம் முற்பட்டுள்ளது. அதிகாரப் பரவலில் நாம் எதிர்பார்க்கும் சுதந்திரம் எமக்கு மறுக்கப்படவிருக்கின்றது. மத்தியின் மையத்தினுள் மாகாணத்தை தொடர்ந்துவைத்திருக்கவே அரசாங்கம்மும் முரம் காட்டுகின்றது.
ஆனால் எம்முள் சிலரோ “அதற்கென்ன நாங்கள் கொழும்பில்த்தானே வசிக்கின்றோம், மத்திய அரசாங்கம் இங்குதானே இருக்கின்றது, நாம் இங்கு சுதந்திரமாக எப்படியும் வலம் வரலாம், ஆனால் மக்களுக்குச் சுதந்திரம் கொடுத்தால் எமது சுதந்திரம் பறிபோய்விடும், எனவே அரசாங்கம் சாட்டையைத் தன்கைவசம் வைத்திருப்பதை நாம் வரவேற்கின்றோம்” என்ற பாணியில் நடந்து வருகின்றார்கள்.
அவர்களின் நடவடிக்கை காலாகாலத்தில் வடகிழக்குத் தமிழ் பேசும் மக்களின் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிடும் என்பதை அவர்கள் உணர்கின்றார்கள் இல்லை.ஒற்றையாட்சியால் எமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி இடங்கள் பறிபோகப் போகின்றன. படைகள் தொடர்ந்து எம் மாகாணங்களில் நிலைநிற்கப்போகின்றன. எம் காணிகளின் வருமானங்கள் அவர்கள் கைவசம் செல்லவிருக்கின்றன.
மகாவலி சட்டத்தின் கீழ்மேலும் மேலும் வெளியிலிருந்து மக்களை எமது மாகாணத்தினுள் கொண்டுவந்து குடியேற்ற இருக்கின்றார்கள். சுற்றுலாவை தமக்குச் சாதகமாக வளர்த்துக் கொள்ளவிருக்கின்றார்கள். எம்மக்களின் தொகைக் குறைவினால் திணைக்களங்களில் தென்னவரை நிலைநிறுத்தி வருகின்றார்கள். இந்த நிலை தொடரும். முன்னேற்றம் என்றபோர்வையில் எமதுகாணிகளைச் சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.
இன்னும் பலதையும் கூறலாம். சமஷ்டி அரசியலின் கீழ் சுயாட்சிச் சுதந்திரம் அதிகாரப்பரவலாக்கல் மூலம் எமக்குக் கிடைத்தால் இவற்றைத் தடுத்துநிறுத்தலாம். ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் அவைதடுக்கப்படமுடியாது.ஐக்கிய நாடுகள் முன், தாமே முன் வந்து செய்வதாக ஏற்றுக்கொண்டவற்றை இன்றுசெய்யப் பின் நிற்கின்றது எம் நாட்டின் அரசாங்கம்.
அடுத்து போர்க்குற்ற விசாரணைகளையும் நிலைமாற்ற நீதிமுறைமைகள் வலியுறுத்துகின்றன.அதைத் தட்டிக்கழிக்கப் பார்க்கின்றது எமது அரசாங்கம். போர்க்குற்றங்கள் எத்தகையன என்பது பற்றியெல்லாம் பேராசிரியர் சுவர்ணராஜா அவர்கள் விளக்கப்படுத்தினார். போரை அநியாயமான முறையில் வேண்டுமென்றே நடத்துவது போர்க்குற்றம்.
அடுத்து மனித குலத்திற்கெதிரான செயல்களில் ஈடுபடுவது போர்க்குற்றம். மூன்றாவது வேண்டுமென்றே இன அழிப்பில் ஈடுபடுவது போர்க்குற்றம். மூன்றிலும் எமது அரசபடைகள் ஈடுபட்டிருந்தன. அக்குற்றவாளிகளை இனங்காண எமது மத்திய அரசாங்கம் பின் நிற்கின்றது. இனப்படுகொலை பற்றிய விளக்கமும் அண்மைக் காலங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
பர்மாவில் றோகின்தியாகொலைகள், ஈராக்கில் யாசிடியரின் வன்புணர்வு நிகழ்ச்சிகள் இனப்படுகொலையின் அம்சமே என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே இன்றைய பேச்சுக்களால் நாம் முக்கியமான இரு விடயங்களைப்புரிந்துள்ளோம்.
சர்வதேசச் சட்டம் விரிவடைந்துள்ளதால் எமது அல்லல்களும் அழிவுகளும் அதனுள் அடங்குவன என்ற முறையில் சர்வதேசச் சட்டத்தை ஒரு கேடயமாக ஏந்தி மத்திய அரசுடன் மோதமுடியும் என்பது.
அடுத்து இல்லாததை இருப்பதாகக் கூறி இனிவருங்காலத்தில் இருப்பதையும் இல்லாததாக்க நாம் உடன்படக்கூடாது என்பது.ஆகவே சர்வதேசச் சட்டம் எதிர்பார்க்கும் நிலைமாற்ற நீதிமுறைமைகளின் கீழ் முறையான அதிகாரப் பரவலாக்கத்தை முயன்றுபெற நீங்கள் அனைவரும் முன்வரவேண்டும்.நிலைமாற்ற நீதிமுறைமைகளின் கீழ் போர்க்குற்றவிசாரணைகளாவன சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிக் குற்றவாளிகளை அடையாளங்காண வேண்டும்.
நாங்கள் இராணுவத்தை ஒட்டுமொத்தமாகக் குறை கூறவில்லை. அதில் கடமையாற்றிய காவாலிகள் சிலரை அடையாளப்படுத்த வேண்டும் என்றே கேட்கின்றோம்.அந்தக் காவாலிகளை வீரதீரசூரர்கள், சிங்கள மக்களின் காவல் மன்னர்கள் என்ற முறையில் மத்திய அரசாங்கத்தில் உள்ளோர் பலர் காப்பாற்ற விளைந்துள்ளார்கள்.
எமது நெருக்குதல்கள் காவாலிகளைக் கடைத்தெருவுக்கு இழுத்துவர வேண்டும் என்று கருதுகின்றோம். இவற்றைச் செய்ய நாம் மக்கள் இயக்கமாக ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும் என்றுகேட்டுக் கொள்கின்றேன். எமது பார்வை சரியென்று கருதும் யாவரும் எம்முடைய மக்கள் இயக்கத்துடன் இணைந்து, அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நெருக்குதல்களை ஏற்படுத்த முன்வரவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் “இடைக்கால அறிக்கை – மாயைகளை கட்டுடைத்தல்” என்னும் தலைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சர்வதேச சட்டம் பலவழிகளிலும் விரிவடைந்து வருகின்றது என்பதை அவதானிப்போம். சர்வதேச சட்டம் என்றாலேயே பாரம்பரியமாகவோ, உடன்பாடுகள் மூலமாகவோ ஒன்று சேர்ந்த ஒரு தொகை விதிகளையே அடிப்படையில் அதுகுறிப்பிடும். இந்த விதிகளைக் கொண்டு நாடுகள் தம்மிடையேயான உறவுகளை வளர்க்கும் போது விதிகள் சட்ட அந்தஸ்து பெறுகின்றன. அண்மைக் காலங்களில் பல முக்கிய மாற்றங்கள் சர்வதேசச் சட்டத்தில் ஏற்பட்டுள்ளன. பலநாடுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள், அவற்றினால் உலக மக்கள் மனதில் ஏற்பட்ட தாக்கங்கள் போன்றவை இந்த மாற்றத்திற்குக் காரணம் ஆகிவிட்டன.
1983ம் ஆண்டு ஜுலை மாதத்தில் எமது அப்போதைய பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன் அவர்கள் மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்தார். அம் மாதம் 23ஆம் திகதிக்கு பின் வந்த நாட்களில் இலங்கையில் நடைபெற்ற கொடூரமான நிகழ்வுகள் தொலைக்காட்சி ஊடக ஒளிபரப்பப்பட்டு வந்தன. அதுபற்றி அவர் பின்னர் என்னிடம் கூறியபோது “எமது நாடு அந்தக் காலகட்டத்தில் நாறியது” என்றார். “வெட்கப்படுகின்றேன்” என்றார்.
அவ்வாறு நாடுகளில் நடந்தவற்றைப் பார்த்த சட்ட வல்லுநர்கள் பலர், சர்வதேச ச்சட்டத்தை விரிவாக்க வேண்டும் என்று எண்ணிய காரணத்தாலேயே சர்வதேசச் சட்டம் இப்போது விரிவடைந்த நிலையில் உள்ளது. இதன் பிரதிபலிப்பே உலகக் குற்றவியல் நீதிமன்ற ஏற்பாடு. அதுமட்டுமல்ல நிலைமாற்றத்தின் போது பாதிப்புக்குள்ளான நாடுகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி இப்பொழுதுவலுவான கருத்துக்கள் தோன்றியுள்ளன. நிலைமாற்றம் என்றால் என்ன? ஒருநாட்டின் அரசியல் நிலையில், யதார்த்தநிலையில் மாற்றம் ஏற்படுவதையே அதுகுறிக்கின்றது. ஒரு இருண்ட காலத்தினுள் இருந்து வெளிச்சத்தை நோக்கி எட்டிப்பார்ப்பதையே நிலைமாற்றம் குறிக்கின்றது.
எனவே நிலைமாறும் நாடுகள் நீதிக்குகந்ததாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளே நிலைமாற்ற நீதிமுறைகள் ஆவன. இதையே Transitional Justice என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். கஷ்ட நிலையில் இருந்து ஒருநாடு மீண்டுவரும் போது என்னென்ன நடவடிக்கைகளை நீதிக்குகந்ததாக அந்நாட்டில் எடுக்கவேண்டும் என்று சர்வதேச சட்டம் எதிர்பார்க்கின்றதோ அவற்றையே நிலைமாற்ற நீதிமுறைகள் என்று குறிப்பிடுகின்றது சர்வதேசச்சட்டம்.யாரோ அடக்கி ஆளப்பட்டதால்த்தான் அந்நாட்டில் வன்முறை வெடித்திருக்க வேண்டும் அல்லது கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிலைமாற்ற நீதிமுறைகள் இரண்டு முக்கிய எதிர்பார்ப்புக்களை முன்னிறுத்தியுள்ளன.ஒன்று அதிகாரப் பரவலாக்கம் மற்றது போர்க் குற்றவாளிகளைத் தண்டித்தல். இவற்றைச் சர்வதேசச் சமூகம் இலங்கையிலும் எதிர்பார்க்கின்றது. போர் முடிவுக்கு 2009ல் வந்திருப்பினும் இனப்பிரச்சனை அதனால்த் தீர்க்கப்படவில்லை.
அதனால்த்தான் அதிகாரப் பரவலாக்கம் தேவையுடையதாகின்றது. தற்போதும் 13வது திருத்தச்சட்டம் அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்தியேயுள்ளது. ஆனால் அது பெரும்பான்மையினரின் பெருந்தயவை முன்வைத்தேயாக்கப்பட்டுள்ளது.அதனால் தான் 1992இன் 58வது இலக்கச் சட்டமான மாவட்ட செயலாளர்கள் பற்றிய அதிகாரமாற்றச் சட்டத்தை இயற்றக் கூடியதாக இருந்தது. ஒற்றையாட்சி எனும் போது முன்னர் கொடுத்த அதிகாரங்களைப் பறித்து இவ்வாறான சட்டங்களைக் கொண்டுவரலாம்.
காரணம் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரம் பெரும்பான்மையினரின் கைவசமே தொடர்ந்திருக்கும். மாகாணசபைகளின் அதிகாரத்தின் கீழிருந்த மாவட்டச் செயலர்கள் திடீரென்று இந்தச் சட்டம் இயற்றப்பட்டதும் மத்திக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். இதனால் இன்று வடமாகாணத்தில் இரட்டை நிர்வாகம் நடைபெற்று வருகின்றது. ஒன்று மக்களால்த் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண உறுப்பினர்களின் நிர்வாகம். மற்றையது மத்திய அரசாங்கத்தின் முகவர்களின் நிர்வாகம்.
இங்கு இரு முகவர்கள் சேர்ந்தும் சேராமலும் அவர்கள் நிர்வாகத்தை நடத்தி வருகின்றார்கள். ஆளுநரும் மத்தியின் முகவர். அரசாங்க அதிபரும் அவர்களின் முகவரே. ஆகவே அதிகாரப் பரவலாக்கம் என்ற போது நாம் எதிர்பார்த்தது நம்மை நாமே ஆண்டு வருவதையே. ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் என்ற போர்வையில் எமக்குக் கிடைத்தது வேண்டியபோது மத்தியின் ஊடுறுவல்களே. இவ்வாறு ஊடுறுவல்கள் தொடர்ந்து இருந்தால் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படப் போகின்றவர்கள் போருக்கு முன்னர் பாதிக்கப்பட்ட அதேமக்களே. இதனால்த்தான் ஒற்றையாட்சியைக் களைந்து சமஷ்டி ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுவருகின்றோம்.
இடைக்காலவரைவுகள் ஒற்றையாட்சியினையே மையமாகக் கொண்டு வரையப்பட்டதால்த்தான் சர்வதேச நாடுகள் போதிய அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இப்பொழுது இன்றைய பேச்சாளர்களின் பேச்சுக்களின் கருப்பொருட்களின் ஒன்றுக்கொன்றான தொடர்பானது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். சர்வதேசச் சட்டம் எதிர்பார்ப்பதைத்தான் ஐக்கிய நாடுகள் கூறியுள்ளன.
ஆர்ஜென்டீனா சர்வாதிகாரத்தில் இருந்து வெளிவந்த போது யுகோஸ்லாவியா, றுவண்டா மற்றும் கம்போடியா போன்ற நாடுகளின் உள்நாட்டுப் போர்களில் இருந்து அவைவிடுபட்ட போது நிலைமாற்ற நீதிமுறைகள் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகள் தடைகளை விதித்தன.உலகக் குற்றவியல் மன்றத்தை உருவாக்குவதில் ஐக்கிய நாடுகள் கரிசனைகாட்டின. ஆகவே சர்வதேசச் சட்டம் நிலைமைக்கேற்றவாறு, சூழலுக்கேற்றவாறுமாறுதல் அடைந்து வந்துள்ளது.
எனவேதான் சர்வதேசச் சட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் நிலைமாற்ற நீதிமுறைகள் என்று எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலும் போர்க்குற்ற விசாரணையும் எமக்கு முக்கியமாகியுள்ளன. இரண்டையுந் தட்டிக்கழிக்கவே இலங்கை அரசாங்கம் முற்பட்டுள்ளது. அதிகாரப் பரவலில் நாம் எதிர்பார்க்கும் சுதந்திரம் எமக்கு மறுக்கப்படவிருக்கின்றது. மத்தியின் மையத்தினுள் மாகாணத்தை தொடர்ந்துவைத்திருக்கவே அரசாங்கம்மும் முரம் காட்டுகின்றது.
ஆனால் எம்முள் சிலரோ “அதற்கென்ன நாங்கள் கொழும்பில்த்தானே வசிக்கின்றோம், மத்திய அரசாங்கம் இங்குதானே இருக்கின்றது, நாம் இங்கு சுதந்திரமாக எப்படியும் வலம் வரலாம், ஆனால் மக்களுக்குச் சுதந்திரம் கொடுத்தால் எமது சுதந்திரம் பறிபோய்விடும், எனவே அரசாங்கம் சாட்டையைத் தன்கைவசம் வைத்திருப்பதை நாம் வரவேற்கின்றோம்” என்ற பாணியில் நடந்து வருகின்றார்கள்.
அவர்களின் நடவடிக்கை காலாகாலத்தில் வடகிழக்குத் தமிழ் பேசும் மக்களின் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிடும் என்பதை அவர்கள் உணர்கின்றார்கள் இல்லை.ஒற்றையாட்சியால் எமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி இடங்கள் பறிபோகப் போகின்றன. படைகள் தொடர்ந்து எம் மாகாணங்களில் நிலைநிற்கப்போகின்றன. எம் காணிகளின் வருமானங்கள் அவர்கள் கைவசம் செல்லவிருக்கின்றன.
மகாவலி சட்டத்தின் கீழ்மேலும் மேலும் வெளியிலிருந்து மக்களை எமது மாகாணத்தினுள் கொண்டுவந்து குடியேற்ற இருக்கின்றார்கள். சுற்றுலாவை தமக்குச் சாதகமாக வளர்த்துக் கொள்ளவிருக்கின்றார்கள். எம்மக்களின் தொகைக் குறைவினால் திணைக்களங்களில் தென்னவரை நிலைநிறுத்தி வருகின்றார்கள். இந்த நிலை தொடரும். முன்னேற்றம் என்றபோர்வையில் எமதுகாணிகளைச் சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.
இன்னும் பலதையும் கூறலாம். சமஷ்டி அரசியலின் கீழ் சுயாட்சிச் சுதந்திரம் அதிகாரப்பரவலாக்கல் மூலம் எமக்குக் கிடைத்தால் இவற்றைத் தடுத்துநிறுத்தலாம். ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் அவைதடுக்கப்படமுடியாது.ஐக்கிய நாடுகள் முன், தாமே முன் வந்து செய்வதாக ஏற்றுக்கொண்டவற்றை இன்றுசெய்யப் பின் நிற்கின்றது எம் நாட்டின் அரசாங்கம்.
அடுத்து போர்க்குற்ற விசாரணைகளையும் நிலைமாற்ற நீதிமுறைமைகள் வலியுறுத்துகின்றன.அதைத் தட்டிக்கழிக்கப் பார்க்கின்றது எமது அரசாங்கம். போர்க்குற்றங்கள் எத்தகையன என்பது பற்றியெல்லாம் பேராசிரியர் சுவர்ணராஜா அவர்கள் விளக்கப்படுத்தினார். போரை அநியாயமான முறையில் வேண்டுமென்றே நடத்துவது போர்க்குற்றம்.
அடுத்து மனித குலத்திற்கெதிரான செயல்களில் ஈடுபடுவது போர்க்குற்றம். மூன்றாவது வேண்டுமென்றே இன அழிப்பில் ஈடுபடுவது போர்க்குற்றம். மூன்றிலும் எமது அரசபடைகள் ஈடுபட்டிருந்தன. அக்குற்றவாளிகளை இனங்காண எமது மத்திய அரசாங்கம் பின் நிற்கின்றது. இனப்படுகொலை பற்றிய விளக்கமும் அண்மைக் காலங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
பர்மாவில் றோகின்தியாகொலைகள், ஈராக்கில் யாசிடியரின் வன்புணர்வு நிகழ்ச்சிகள் இனப்படுகொலையின் அம்சமே என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே இன்றைய பேச்சுக்களால் நாம் முக்கியமான இரு விடயங்களைப்புரிந்துள்ளோம்.
சர்வதேசச் சட்டம் விரிவடைந்துள்ளதால் எமது அல்லல்களும் அழிவுகளும் அதனுள் அடங்குவன என்ற முறையில் சர்வதேசச் சட்டத்தை ஒரு கேடயமாக ஏந்தி மத்திய அரசுடன் மோதமுடியும் என்பது.
அடுத்து இல்லாததை இருப்பதாகக் கூறி இனிவருங்காலத்தில் இருப்பதையும் இல்லாததாக்க நாம் உடன்படக்கூடாது என்பது.ஆகவே சர்வதேசச் சட்டம் எதிர்பார்க்கும் நிலைமாற்ற நீதிமுறைமைகளின் கீழ் முறையான அதிகாரப் பரவலாக்கத்தை முயன்றுபெற நீங்கள் அனைவரும் முன்வரவேண்டும்.நிலைமாற்ற நீதிமுறைமைகளின் கீழ் போர்க்குற்றவிசாரணைகளாவன சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிக் குற்றவாளிகளை அடையாளங்காண வேண்டும்.
நாங்கள் இராணுவத்தை ஒட்டுமொத்தமாகக் குறை கூறவில்லை. அதில் கடமையாற்றிய காவாலிகள் சிலரை அடையாளப்படுத்த வேண்டும் என்றே கேட்கின்றோம்.அந்தக் காவாலிகளை வீரதீரசூரர்கள், சிங்கள மக்களின் காவல் மன்னர்கள் என்ற முறையில் மத்திய அரசாங்கத்தில் உள்ளோர் பலர் காப்பாற்ற விளைந்துள்ளார்கள்.
எமது நெருக்குதல்கள் காவாலிகளைக் கடைத்தெருவுக்கு இழுத்துவர வேண்டும் என்று கருதுகின்றோம். இவற்றைச் செய்ய நாம் மக்கள் இயக்கமாக ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும் என்றுகேட்டுக் கொள்கின்றேன். எமது பார்வை சரியென்று கருதும் யாவரும் எம்முடைய மக்கள் இயக்கத்துடன் இணைந்து, அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நெருக்குதல்களை ஏற்படுத்த முன்வரவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரைஸ் குக்கர் பொங்கல்
எனது இணைய வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .இந்த பொங்கல் ஆனது உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க சந்தோசம் போங்க ,பொருளாதாரம் பெருக எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்
இரட்டை குண்டு வெடிப்பு: தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 16 பேர் பலி
ஈராக் தலைநகரான பக்தாத்திலுள்ள ரைய்ரன் சதுக்கத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ள இரட்டை தற்கொலைத் தாக்குதலில் இது வரை சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 65 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இடிபாடுகளிலிருந்து சடலங்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமெனவும் அவ்வமைச்சு கூறியுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டுள்ள இடத்திலேயே இந்த இரட்டை தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களே அவ்விடத்தில் அதிகளவில் கூடியிருந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இடிபாடுகளிலிருந்து சடலங்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமெனவும் அவ்வமைச்சு கூறியுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டுள்ள இடத்திலேயே இந்த இரட்டை தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களே அவ்விடத்தில் அதிகளவில் கூடியிருந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவுவைத்துக் கொள்ள, அதிகம் விரும்புவார் ட்ரம்
அமெரிக்காவின் பிரபல பத்திரிகையாளர் மைக்கேல் வுல்ப் என்பவர் 'பயர் அண்ட் ஃபுரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்' என்கின்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அந்த புத்தகத்தில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து உலகத்திற்கு தெரியாத பல முக்கிய விஷயங்கள் கூறப்பட்டு இருக்கிறது.
இந்த புத்தகம் அமெரிக்காவில் பிரச்சனையை ஏற்படுத்துமா..? என்று
பலரும் நினைத்துக் கொண்டு இருந்த போதே., அது டிரம்ப்பின் குடும்பத்திற்குள்ளேயே பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்து வெளிவர இருக்கும் இந்த புத்தகத்தை 300 க்கும் அதிகமான நபர்களிடம் பேட்டி எடுத்து எழுதி இருக்கிறார் அந்த பத்திரிகையாளர்.
டிரம்பிற்கு நெருக்கமானவர்கள், டிரம்புடன் வேலை பார்க்கும் நபர்கள் என்று பலரிடம் அவர் பேட்டி எடுத்துள்ளார். அதனோடு., ரஷ்யாவில் இருக்கும் சில நபர்களிடமும் மைக்கேல் வுல்ப் பேட்டி எடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்பட்டது. அது தற்போது இந்த புத்தகத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது.
இந்த புத்தகத்தில் இருக்கும் இன்னொரு மிக முக்கியமான குற்றச்சாட்டு., டிரம்ப் தன்னுடைய நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.
அவர் தன் நண்பர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுவார் என்றும் இந்த புத்தகத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் சில பேட்டி அளித்துள்ளனர். இந்த புத்தகத்தினால் வெள்ளை மளிகை கலக்கத்தில் உள்ளது.
அந்த புத்தகத்தில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து உலகத்திற்கு தெரியாத பல முக்கிய விஷயங்கள் கூறப்பட்டு இருக்கிறது.
இந்த புத்தகம் அமெரிக்காவில் பிரச்சனையை ஏற்படுத்துமா..? என்று
பலரும் நினைத்துக் கொண்டு இருந்த போதே., அது டிரம்ப்பின் குடும்பத்திற்குள்ளேயே பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்து வெளிவர இருக்கும் இந்த புத்தகத்தை 300 க்கும் அதிகமான நபர்களிடம் பேட்டி எடுத்து எழுதி இருக்கிறார் அந்த பத்திரிகையாளர்.
டிரம்பிற்கு நெருக்கமானவர்கள், டிரம்புடன் வேலை பார்க்கும் நபர்கள் என்று பலரிடம் அவர் பேட்டி எடுத்துள்ளார். அதனோடு., ரஷ்யாவில் இருக்கும் சில நபர்களிடமும் மைக்கேல் வுல்ப் பேட்டி எடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்பட்டது. அது தற்போது இந்த புத்தகத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது.
இந்த புத்தகத்தில் இருக்கும் இன்னொரு மிக முக்கியமான குற்றச்சாட்டு., டிரம்ப் தன்னுடைய நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.
அவர் தன் நண்பர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுவார் என்றும் இந்த புத்தகத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் சில பேட்டி அளித்துள்ளனர். இந்த புத்தகத்தினால் வெள்ளை மளிகை கலக்கத்தில் உள்ளது.
Subscribe to:
Posts
(
Atom
)